யுனெஸ்கோவால் பாரம்பரிய சின்னம் என்ற அங்கீகாரம் அளிக்கப்பட்ட ஊட்டி மலை ரயிலின் கட்டணம் வரும் அக்டோபர் மாதம் முதல் உயர்த்தப்படுகிறது.
சர்வதேச சுற்றுலா நகரமான ஊட்டிக்கு நாள்தோறும் மேட்டுப்பாளையத்தில் இருந்து மலை ரயில் இயக்கப்படுகிறது. ஊட்டியிலிருந்து குன்னுார் வரை டீசல் இன்ஜின் மூலமும், குன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் வரை நீராவி இன்ஜின் மூலமும் மலை ரயில் இயக்கப்படுகிறது.
அந்தவகையில் ஊட்டியில் இருந்து லவ்டேல், கேத்தி, குன்னுார்வரை முன்பதிவு செய்யாமல் பயணிக்கும் பயணிகளுக்கு, மலை ரயில் கட்டணம் ரூ. 10 ஆகவும், முன்பதிவு செய்து பயணிப்பவர்களுக்கு கட்டணம் ரூ. 25 ஆகவும், ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பயணிகளுக்கு முன்பதிவு செய்யாத கட்டணம் ரூ. 25, முன்பதிவு செய்து பயணிப்பவர்களுக்குக் கட்டணம் ரூ.30 ஆகவும் தற்போது நடைமுறையில் உள்ளது.
இதனால், மலை ரயில் பராமரிப்பது, ஊழியர்களுக்கு ஊதியம் கொடுப்பது எனப் பல்வேறு பாதிப்புகளால் தென்னக ரயில்வே நிர்வாகத்துக்கு ஆண்டுக்கு ரூ. 24 கோடி வரை இழப்பு ஏற்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவிக்கிறது. இந்நிலையில் இழப்பை ஈடு செய்வதற்காக, வரும் மலை ரயில் கட்டணத்தை உயர்த்த தென்னக ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
உயர்த்தப்பட்ட கட்டணத்தின்படி, மேட்டுப்பாளையம் முதல் உதகை வரைமுதல் வகுப்பு கட்டணம் 195 ரூபாயில் இருந்து, 395 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. இரண்டாம் வகுப்பு முன்பதிவு கட்டணம் 30 ரூபாயில் இருந்து 130 ரூபாயாகவும், முன்பதிவற்ற இரண்டாம் வகுப்பு கட்டம் 15 ரூபாயில் இருந்து 75 ரூபாயாகவும் உயர்த்தப்படுகிறது.
இதேபோல, மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூருக்கு முதல்வகுப்பு கட்டணம் 174 ரூபாயில் இருந்து 295 ஆகவும், இரண்டாம் வகுப்பு முன்பதிவு கட்டணம் 25 ரூபாயில் இருந்து 85 ஆகவும், இரண்டாம் வகுப்பு முன்பதிவற்ற கட்டணம் 10 ரூபாயில் இருந்து 45 ரூபாயாகவும் உயர்த்தப்படுகிறது. உயர்த்தப்பட்ட கட்டணம் அக்டோபர் மாதம் 8-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
சர்வதேச சுற்றுலா நகரமான ஊட்டிக்கு நாள்தோறும் மேட்டுப்பாளையத்தில் இருந்து மலை ரயில் இயக்கப்படுகிறது. ஊட்டியிலிருந்து குன்னுார் வரை டீசல் இன்ஜின் மூலமும், குன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் வரை நீராவி இன்ஜின் மூலமும் மலை ரயில் இயக்கப்படுகிறது.
அந்தவகையில் ஊட்டியில் இருந்து லவ்டேல், கேத்தி, குன்னுார்வரை முன்பதிவு செய்யாமல் பயணிக்கும் பயணிகளுக்கு, மலை ரயில் கட்டணம் ரூ. 10 ஆகவும், முன்பதிவு செய்து பயணிப்பவர்களுக்கு கட்டணம் ரூ. 25 ஆகவும், ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பயணிகளுக்கு முன்பதிவு செய்யாத கட்டணம் ரூ. 25, முன்பதிவு செய்து பயணிப்பவர்களுக்குக் கட்டணம் ரூ.30 ஆகவும் தற்போது நடைமுறையில் உள்ளது.
இதனால், மலை ரயில் பராமரிப்பது, ஊழியர்களுக்கு ஊதியம் கொடுப்பது எனப் பல்வேறு பாதிப்புகளால் தென்னக ரயில்வே நிர்வாகத்துக்கு ஆண்டுக்கு ரூ. 24 கோடி வரை இழப்பு ஏற்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவிக்கிறது. இந்நிலையில் இழப்பை ஈடு செய்வதற்காக, வரும் மலை ரயில் கட்டணத்தை உயர்த்த தென்னக ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
உயர்த்தப்பட்ட கட்டணத்தின்படி, மேட்டுப்பாளையம் முதல் உதகை வரைமுதல் வகுப்பு கட்டணம் 195 ரூபாயில் இருந்து, 395 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. இரண்டாம் வகுப்பு முன்பதிவு கட்டணம் 30 ரூபாயில் இருந்து 130 ரூபாயாகவும், முன்பதிவற்ற இரண்டாம் வகுப்பு கட்டம் 15 ரூபாயில் இருந்து 75 ரூபாயாகவும் உயர்த்தப்படுகிறது.
இதேபோல, மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூருக்கு முதல்வகுப்பு கட்டணம் 174 ரூபாயில் இருந்து 295 ஆகவும், இரண்டாம் வகுப்பு முன்பதிவு கட்டணம் 25 ரூபாயில் இருந்து 85 ஆகவும், இரண்டாம் வகுப்பு முன்பதிவற்ற கட்டணம் 10 ரூபாயில் இருந்து 45 ரூபாயாகவும் உயர்த்தப்படுகிறது. உயர்த்தப்பட்ட கட்டணம் அக்டோபர் மாதம் 8-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.