ஆப்நகரம்

கனமழை எச்சரிக்கை; நீலகிரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!

மழை காரணமாக, நீலகிரியில் உள்ள 4 தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 15 Jul 2018, 9:23 pm
உதகை: மழை காரணமாக, நீலகிரியில் உள்ள 4 தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil Nilgiri Schools


நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. பலத்த காற்றால் மரங்கள் விழுந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதனைச் சரிசெய்யும் பணிகளில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் பிங்கர் போஸ்ட் பகுதியில் மரம் விழுந்து கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.

இந்நிலையில் மழை பெய்ய தொடர் வாய்ப்புள்ளதால், நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுகா பள்ளிகளுக்கு நாளை(ஜூலை 16) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதாவது ஊட்டி, குந்தா, பந்தலூர், கூடலூர் ஆகிய தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையில் தொடர் மழை பெய்து வருவதால், பொள்ளாச்சி சாலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

Nilgiri Schools are holiday tomorrow due to heavy rain.

அடுத்த செய்தி