ஆப்நகரம்

புழல் சிறையில் கைதிகளுக்கு சொகுசு வசதிகள்; மேலும் 9 வார்டன்கள் இடமாற்றம்!

கைதிகளுக்கு சொகுசு வசதிகள் அளிக்கப்பட்டது தொடர்பாக, மேலும் 9 வார்டன்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Samayam Tamil 18 Sep 2018, 6:14 pm
திருவள்ளூர்: கைதிகளுக்கு சொகுசு வசதிகள் அளிக்கப்பட்டது தொடர்பாக, மேலும் 9 வார்டன்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Samayam Tamil Puzhal Jail


திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல் சிறையில் கைதிகளுக்கு சொகுசு வசதிகள் செய்து தரப்பட்டதாக செய்திகள் பரவின. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தின.

முதற்கட்டமாக 6 கைதிகளை வேறு வேறு சிறைகளுக்கு சிறைத்துறை மாற்றியது. தண்டனைப் பிரிவில் வார்டனாக இருந்த 8 பேர் வேறு, வேறு சிறைகளுக்கு மாற்றி சிறைத்துறை ஏடிஜிபி அசுதோஷ் சுக்லா உத்தரவிட்டார்.

கைதிகளுக்கு சொகுசு வசதிகள் அளிக்கப்பட்டது தொடர்பாக தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று சார்லின் எடிசன், கிருஜெய்சிங், வெற்றிவேல், கண்ணதாசன், சூர்யநாராயணன், சேரந்தியா பிள்ளை, இமானுவேல், செல்வன், ராஜ்குமார் ஆகிய வார்டன்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பான உத்தரவை சிறைத்துறை ஏடிஜிபி அசுதோஷ் சுக்லா அதிரடியாக பிறப்பித்துள்ளார்.

Nine Puzhal Jail wardens transferred for giving luxury facility to prisoners issue.

அடுத்த செய்தி