ஆப்நகரம்

கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம்: அதிகாரிகளை முடுக்கிவிட்ட அரசு!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த காவல்துறை அதிகாரிகள் தலைமையில் 9 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Samayam Tamil 6 May 2021, 7:43 am
தமிழகத்தின் தினசரி கொரோனா பாதிப்பு 23ஆயிரத்தை கடந்துள்ளது. பெருநகரங்களில் மட்டுமே இதற்கு முன் மையம் கொண்டிருந்த கொரோனா புயல் தற்போது சிறு நகரங்களிலும் கிராமங்களிலும் கூட சுழன்றடித்து வருகிறது.
Samayam Tamil covid cases


புதிதாக பதவியேற்கும் திமுக அரசுக்கு கொரோனா பரவல் மிகப் பெரும் சவாலாக உள்ளது. இந்நிலையில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இன்று முதல் மே 20 வரை கடும் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின் நாளை (மே 7ஆம் தேதி) முதல்வராகப் பதவியேற்கும் நிலையில் அன்று மாலையே மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
மா.சு.க்கு ஸ்டாலின் கொடுத்த அசைன்ட்மெண்ட்: அந்த அதிகாரிக்கு கிழியும் சீட்?
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஏடிஜிபிக்கள், ஐஜிக்கள் அளவிலான அதிகாரிகளைக் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தின் 38 மாவட்டங்கள் 9 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

* சென்னை மண்டலம் (டீம்-1 சென்னை நகரம், டீம்-2 திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு) - எச்.எம்.ஜெயராம், ஐஜி - காத்திருப்போர் பட்டியல்.

*வேலூர் மண்டலம் (வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை) - சாரங்கன், ஐஜி - காவல் பயிற்சி.

*விழுப்புரம் மண்டலம் (விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி) - பாண்டியன், விழுப்புரம் சரக டிஐஜி.

*சேலம் (சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல்) - தினகரன், ஐஜி - காத்திருப்போர் பட்டியல்.

*கோவை மண்டலம் (கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நீலகிரி) சஞ்சய் குமார், ஐஜி - தொழில்நுட்பப்பிரிவு.

*திருச்சி மண்டலம் (திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கடலூர்) - அம்ரேஷ் புஜாரி, ஏடிஜிபி - தொழில் நுட்பப்பிரிவு.

திமுக அமைச்சரவையில் யாருக்கு இடம்? வெளியான புதிய தகவல்!

*தஞ்சை மண்டலம் (தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை) - லோகநாதன், ஐஜி - காத்திருப்போர் பட்டியல்.

*மதுரை (மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை) - சைலேஷ்குமார் யாதவ், ஏடிஜிபி - சமூக நலன் மற்றும் மனித உரிமை.

9. நெல்லை (தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி) - முருகன், ஐஜி - நவீனமயமாக்கல் பிரிவு.

மேற்கண்ட அதிகாரிகள் 9 மண்டலங்களில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி