ஆப்நகரம்

தமிழகத்தில் ஒரே நாளில் 19 பேர் பலி..! 30 ஆயிரத்தை கடந்த பாதிப்பு...

சென்னையில் கொரோனா பாதிப்பு தீவிரமாகி கொண்டே செல்லலும் நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை இருபதாயிரத்தை கடந்து விட்டது.

Samayam Tamil 6 Jun 2020, 7:27 pm
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் இன்றும் மேலும் 1458 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 30,152 ஆக உயர்ந்துள்ளது.
Samayam Tamil corona death in tamil nadu today


தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனாவால் இன்று 19 பேர் பலியாகியுள்ளனர். இதில் 10 பேர் தனியார் மருத்துவமனையிலும், 9 பேர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 251 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 633 பேர் குணமாகியுள்ள நிலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 16,395 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக இன்று சென்னையில் 1146 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னை கொரோனா பாதிப்பு 20,993 ஆக அதிகரித்துவிட்டது. சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று புதிதாக 95 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1719 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது கொரோனா சிகிச்சையிலும், தனிமைப்படுத்தப்பட்டும் 13,503 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி