ஆப்நகரம்

Nirmala Devi case : நிர்மலா தேவி விவகாரம்: முருகன், கருப்பசாமிக்கு ஜாமீன்!

மாணவிகளை தவறாக அழைத்த விவகாரத்தில் நிர்மலா தேவியுடன் கைது செய்யப்பட்ட முருகன் மற்றும் கருப்பசாமிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

Samayam Tamil 12 Feb 2019, 5:27 pm
மாணவிகளை தவறாக அழைத்த விவகாரத்தில் நிர்மலா தேவியுடன் கைது செய்யப்பட்டமுருகன் மற்றும் கருப்பசாமிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
Samayam Tamil 201805041224522023_Nirmala-devi-case-professor-murugan-and-karuppasamy-bail_SECVPF


கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, பேராசிரியர் முருகன்,ஆராய்ச்சி மாணவர்கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கின் விசாரணை சி.பி.சி.ஐ.டிக்கு ஏற்கனவே மாற்றப்பட்டது. மேலும் இந்த வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளாநீதிமன்றம் விசாரணை செய்து வருகிறது. இந்த வழக்கிலிருந்து தங்களை விடுவிக்குமாறுநிர்மலா தேவி உட்பட மூவரும் பல முறை கிளை நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தனர். மேலும் இவர்கள் ஜாமீன் கோரி 7 முறை தாக்கல் செய்த மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து முருகன் மற்றும் கருப்பசாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில் இருவருக்கும் உச்சநீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. நிர்மலாதேவி அளித்த வாக்குமூலத்தில் கருப்பசாமி மற்றும் முருகனுக்காகத்தான் மாணவிகளை தவறாக அழைத்ததாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி