ஆப்நகரம்

மதுரை ஆதின மடத்துக்குள் நித்தியானந்தா நுழைய தடை.!

மதுரை ஆதினம் மடத்துக்குள் நித்தியானந்தா நுழைய உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது.

TNN 11 Oct 2017, 1:26 pm
மதுரை ஆதினம் மடத்துக்குள் நித்தியானந்தா நுழைய உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது.
Samayam Tamil nithyaanantha not allowed to madurai aadhinam madurai highcourt
மதுரை ஆதின மடத்துக்குள் நித்தியானந்தா நுழைய தடை.!


மதுரை ஜெய்ஹிந்த் புரத்தைச் சேர்ந்த ஜெகதல பிரதாபன் தொடுத்த வழக்கில், சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் நித்யானந்தா தன்னை மதுரை ஆதீன மடத்தின் 293-வது மடாதிபதியாக பிரகடனப்படுத்திக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். நித்யானந்தா ஆதீனமாக நியமனம் செய்வதற்கு தகுதியுடையவர் அல்ல என தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவிக்கப்பட்டதாகவும், இதையடுத்து அவர் மடத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் ஜெகதல பிரதாபன் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், மடத்துக்குள் நுழைவதற்கு நித்யானந்தாவுக்கு போலீஸ் அனுமதி வழங்கினால் தேவையில்லாத சர்ச்சைகளும், சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படும் என குறிப்பிட்டிருந்த ஜகதல பிரதாபன், மடத்துக்குள் நுழைய நித்யானந்தாவுக்கு நிரந்தர தடை விதித்து உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்த நிலையில், இன்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், மதுரை ஆதினம் மடத்துக்குள் நித்தியானந்தா நுழைய தடை விதித்து நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.

Nithyaanantha not allowed to Madurai aadhinam- Madurai highcourt

அடுத்த செய்தி