ஆப்நகரம்

கைலாசாவுக்கு இலவச விசா, விரும்புவோர் வரலாம் - நித்தி அதிரடி அறிவிப்பு

கைலாசா நாட்டுக்கு வர விரும்புவர்களுக்கு மூன்று நாள் இலவச விசா வழங்குவதாக நித்யானந்தா பேசும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

Samayam Tamil 17 Dec 2020, 8:19 pm
பாலியல் வழக்கில் தேடப்பட்டு வரும் சாமி நித்யானந்தா இந்தியாவில் இருந்து வெளியேறி கைலாசா நாட்டை உருவாகியுள்ளதாக முன்னரே தெரிவித்திருந்தார். மேலும், கைலாசா மத்திய வங்கி, கைலாசா நாணயம் என ஒவ்வொன்றாக அறிவித்து வந்த அவர், சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது பேசி வீடியோ வெளியிட்டு வருகிறார்.
Samayam Tamil file pic


சைபர் க்ரைம் முதல் இன்டர்போல் வரை முயற்சித்தும் நித்யானந்தாவை குறித்து சிறு தகவலைக்கூட சேகரிக்கவில்லை என கூறப்படுகிறது. ஆனால், சமூக ஊடகத்தில் ஆக்டிவாக இருக்கும் அவர் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு பதிலளித்து வருகிறார்.

இந்த நிலையில் கைலாசாவிற்கு வர விரும்புவோர் ஆஸ்திரேலியா வரை வந்துவிட்டால், அங்கிருந்து கைலாசாவுக்கு கட்டம் ஏதுமின்றி இலவசமாக விமானத்தில் அழைத்து வரப்படுவார்கள் என்று புதிய வீடியோ ஒன்றில் நித்யானந்தா கூறியுள்ளார்.

அந்த வீடியோவில், கைலாசாவுக்கு வருகை தர விரும்புபவர்கள் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பித்தால் மூன்று நாள் இலவச விசா வழங்கப்படும் என்றும் அப்படி வருபவர்கள் ஆஸ்திரேலியா வரைக்கும் சொந்த செலவில் வந்துவிடவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

முதல்வர் பழனிசாமியும் பிக்பாஸ் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது - கமல்

மேலும், ஆஸ்திரேலியாவில் இருந்து கருடா என்றழைக்கப்படும் சிறு சிறு விமானங்கள் மூலம் இலவசமாகவே கைலாசாவுக்கு அழைத்து வந்து மூன்று நாட்களுக்கு உணவு, இருப்பிடம் மற்றும் போக்குவரத்து வசதிகளை அமைத்து கொடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே பலர் வாய்ப்பு கிடைத்தால் கைலாசாவுக்கு சென்று விடலாம் என்று எண்ணிக்கொண்டிருக்கும் நிலையில் தற்போது நித்யானந்தா பேசியதாக வளம் வரும் இந்த வீடியோவால் கைலாசா விரும்பிகள் பரவசம் அடைந்துள்ளனர். ஆனால், இதுவரை நித்யானந்தா கைலாசா நாட்டை அமைத்ததான அதிகாரபூர்வ தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி