ஆப்நகரம்

மதுரை ஆதீன மடத்துக்குள் நுழைய நித்யானந்தாவுக்கு தடைவிதித்தது உயர்நீதிமன்றம்!

மதுரை ஆதீன மடாதிபதியாக தன்னைத்தானே அறிவித்துக்கொண்ட நித்யானந்தாவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மதுரை ஆதீனத்துக்குள் நுழையக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.

Samayam Tamil 5 Mar 2018, 3:29 pm
மதுரை ஆதீன மடாதிபதியாக தன்னைத்தானே அறிவித்துக்கொண்ட நித்யானந்தாவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மதுரை ஆதீனத்துக்குள் நுழையக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.
Samayam Tamil nithyanandha has been banned by the madurai high court bench from entering in the madurai mutt
மதுரை ஆதீன மடத்துக்குள் நுழைய நித்யானந்தாவுக்கு தடைவிதித்தது உயர்நீதிமன்றம்!


கடந்த 2012ம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் 293வது மடாதிபதியாக தன்னைத்தானே அறிவித்துக்கொண்டார். இதையடுத்து, தற்போதைய மடாதிபதி உயிரோடு இருக்கும் போது மற்றொருவா் எந்த வகையில் தன்னை இளைய மடாதிபதியாக அறிவிக்க முடியும், என்று கூறி ஜெகதலபிரதாபன் என்பவர் உயா்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்றக் கிளை இன்று தீர்ப்பளித்தது. இதில், நித்யானந்தா மதுரை ஆதீன மடத்துக்குள் நுழையவும், மதுரை ஆதீன நிர்வாகத்துக்குட்பட்ட கோயில்களில் நுழையவும் நித்யானந்தாவுக்கு தடை விதிப்பதாக நீதிபதி மகாதேவன் அந்தத் தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், முறைகேட்டில் ஈடுபடும் மடாதிபதிகள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, நித்தியானந்தா மடாதிபதியாக உரிமை கோரி தொடர்ந்த மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டு, மன்னிப்பு கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி