ஆப்நகரம்

நெய்வேலி அனல் மின் நிலைய விபத்து: முதல்வர் பழனிசாமி இழப்பீடு அறிவிப்பு

நெய்வேலி அனல் மின் நிலைய விபத்தில் உயிரிழந்த நபர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி இழப்பீடு தொகையை அறிவித்துள்ளார்

Samayam Tamil 1 Jul 2020, 5:21 pm
நெய்வேலியில் செயல்பட்டு வரும் என்.எல்.சி. இரண்டாவது அனல் மின் நிலையத்தின் 5ஆவது அலகில் பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்ட விபத்தில் இதுவரை தொழிலாளர்கள் 6 பேர் உயிரிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிலர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Samayam Tamil என்.எல்.சி. பாய்லர் விபத்து
என்.எல்.சி. பாய்லர் விபத்து


என்.எல்.சி. அனல் மின் நிலையத்தில் கடந்த இரண்டு மாதங்களில் இரண்டாவது முறையாக ஏற்படும் விபத்து இதுவாகும். கடந்த மே மாதம் 7ஆம் தேதி இதே இரண்டாவது அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது மீண்டும் விபத்து ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, மத்திய அரசு நெய்வேலி நிறுவனத்தில் நடைபெறும் தொடர் விபத்துகள் தொடர்பாக உயர்மட்டக்குழு அமைத்து விசாரிக்க வேண்டுமெனவும், அதில் சம்பந்தப்பட்ட உயர்மட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

என்.எல்.சி. பாய்லர் விபத்து: அமித் ஷா வேதனை

இந்த நிலையில், நெய்வேலி அனல் மின் நிலைய விபத்தில் உயிரிழந்த 6 நபர்களுக்கு தலா ரூ.3 லட்சமும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். அத்துடன், நெய்வேலி அனல் மின் நிலைய விபத்தில் உயிரிழந்த நபர்களுக்கு முதலமைச்சர் பழனிச்சாமி தனது இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அனல்மின் நிலைய விபத்தில் தொழிலாளர்கள் இறந்தது வேதனை அளிப்பதாகவும், படுகாயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்த விவகாரத்தில் மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக முதல்வர் பழனிசாமியிடம் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி