ஆப்நகரம்

நெய்வேலி என்.எல்.சி. விபத்து: ரூ.25 லட்சம் நிவாரணம்

என்.எல்.சி.யில் பாய்லர் விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர், அவர்களுடன் என்.எல்.சி. நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தியதன் மூலம் சுமூக தீர்வு எட்டப்பட்டது

Samayam Tamil 11 May 2020, 2:34 pm
கடலூர்: நெய்வேலி என்.எல்.சி.யில் பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என என்.எல்.சி, நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் மின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. அனல் மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், என்.எல்.சி. அனல் மின் நிலையத்தின் 2ஆவது அலகில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதேசமயம், இந்த விபத்தில் சிக்கி 8 தொழிலாளார்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை தனியார் பள்ளிகளில் வசூல் ஆரம்பம்..! ப்ளீஸ் நடவடிக்கை எடுங்க கலெக்டர்...

இதனிடையே, விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், என்.எல்.சி. முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் என்.எல்.சி. நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது. அதில், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும். குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை வாய்ப்பு வழங்குவதாக என்.எல்.சி. உறுதியளித்தது.

இதனைத்தொடர்ந்து, என்.எல்.சி. நிர்வாகத்தின் உறுதியை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

அடுத்த செய்தி