ஆப்நகரம்

உயிரோடு இருப்பவர்களுக்கு கட் அவுட், பேனர் வைக்க உயர்நீதிமன்றம் தடை

உயிரோடு இருப்பவர்களுக்கு கட்அவுட் , பேனர் வைக்க தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

TNN 24 Oct 2017, 3:30 pm
உயிரோடு இருப்பவர்களுக்கு கட்அவுட் , பேனர் வைக்க தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Samayam Tamil no banners and cut outs for living people says chennai high court
உயிரோடு இருப்பவர்களுக்கு கட் அவுட், பேனர் வைக்க உயர்நீதிமன்றம் தடை


பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் பேனர்களை தடைவிதிக்கக் கோரி, அருகம்பாக்கத்தைச் சேர்ந்த திரிலோக்‌ஷன குமாரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் . இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

அதில் கட்டடங்கள்,குடியிருப்பு பகுதிகளில் தேவையில்லாத பேனர்கள், கட்அவுட்கள் வைப்பதை தடுக்க வேண்டும் என்றும் சுத்தமான சுகாதாரமான சூழ்நிலை நிலவ,உள்ளாட்சி அமைப்புகள், போக்குவரத்துக்கு இடையூராக கட் அவுட், பேனர்கள் உள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார்.

மேலும், 1959 ஆம் ஆண்டு சட்டத்தை அவ்வப்போது புதுப்பிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

no banners and cut outs for living people says chennai high court

அடுத்த செய்தி