ஆப்நகரம்

புயல் மியான்மர் பக்கம் சென்றதால் தமிழகத்துக்கு வெப்பம் தான் மிச்சம்

தமிழகத்தில் அடுத்த 2 தினங்களில் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

TNN 14 Apr 2017, 5:01 pm
சென்னை : தமிழகத்தில் அடுத்த 2 தினங்களில் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil no chance for rain in chennai
புயல் மியான்மர் பக்கம் சென்றதால் தமிழகத்துக்கு வெப்பம் தான் மிச்சம்


சில தினங்களுக்கு முன் வங்கக் கடலில் தோன்றிய புயல் தமிழகத்தை நோக்கி வரும், அதன் மூலம் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்தது.
இதனால் வெயிலின் கொடுமையிலிருந்து தப்பிக்கலாம், குடிநீர் பிரச்னை தீரும் என நம்பியிருந்தனர். ஆனால் வங்கக்கடலில் உருவான காற்றாழுத்த தாழ்வு நிலை மியான்மர் நோக்கி சென்று விட்டதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரனமாக மழைக்கு பதிலாக, அடுத்த இரண்டு நாட்களில் வெப்பம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுள்ளது.

அடுத்த செய்தி