ஆப்நகரம்

Vijayabaskar: பிராய்லர் கோழி, முட்டை சாப்பிடலாமா; எதும் கொரோனா வருமா? - அமைச்சர் விஜயபாஸ்கர் பதில்!

கோழி இறைச்சி மற்றும் முட்டை மூலம் கொரோனா வைரஸ் பரவக்கூடுமா என்ற கேள்விக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளித்துள்ளார்.

Samayam Tamil 6 Mar 2020, 1:43 pm
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சீனாவில் தொடங்கி 75க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியிருப்பதாக சொல்லப்படுகிறது. இதன் பலி எண்ணிக்கை மூன்றாயிரத்தைத் தாண்டிவிட்ட நிலையில், பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்க உள்ளது. பல்வேறு நாடுகள் கொரோனாவை தடுக்க உரிய முயற்சி எடுக்கவில்லை என்று உலக சுகாதார அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
Samayam Tamil Vijayabaskar


யாரும் அலட்சியமாக செயல்பட வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா பரவத் தொடங்கியுள்ளது. வெப்ப மண்டலமான இந்தியாவில் கொரோனா போன்ற வைரஸ்கள் நிலைத்திருக்க முடியாது என்று கூறப்பட்டது.

இதனால் இங்கு யாருக்கு பரவாது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போதைய காலநிலை மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்த பயணிகள் மூலம் படிப்படியாக பரவியுள்ளது. இந்தியாவில் இதுவரை 31 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. இதனை மாநில சுகாதாரத்துறை உறுதிப்படுத்தியுள்ளது. அதேசமயம் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

கொரோனா பத்தி டவுட்டா... அப்போ உடனே இந்த நம்பருக்கு ஃபோன் பண்ணுங்க!!

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூர் நகராட்சியில் புதிதாக மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா வைரஸ் பற்றி தமிழக மக்கள் அச்சப்படவோ, கவலைப்படவோ தேவையில்லை. பிராய்லர் கோழி மற்றும் முட்டை சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் பரவாது.

இதுபோன்ற தவறான வதந்திகளை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

அடுத்த செய்தி