ஆப்நகரம்

சட்டசபையில் இன்று சபாநாயகர் மீது ஓட்டெடுப்பு!

சபாநாயகர் தனபால் மீது சட்டசபையில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, பின் ஓட்டெடுப்பு நடத்தப்படுகிறது.

TOI Contributor 23 Mar 2017, 10:06 am
சென்னை: சபாநாயகர் தனபால் மீது சட்டசபையில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, பின் ஓட்டெடுப்பு நடத்தப்படுகிறது.
Samayam Tamil no confidence motion will be move against the speaker by dmk in tamilnadu assembly on today the letter was given to the secretariat of the assembly
சட்டசபையில் இன்று சபாநாயகர் மீது ஓட்டெடுப்பு!


கடந்த பிப்ரவரி 18 ம் தேதி தமிழக சட்டசபையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தது. அதில் ஏற்பட்ட ரகளை காரணமாக தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து எதிர்க்கட்சியினர் இல்லாமல் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் 122 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவுடன் எடப்பாடி பழனிச்சாமி அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதன் மூலம் சபாநாயகர் தனபால் ஒருதலை பட்சமாக செயல்படுவதாக தி.மு.க., குற்றம் சாட்டியது. இந்நிலையில், சட்டசபை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கூடியதும், முதலில் கேள்வி-பதில் நேரம் ஒரு மணி நேரம் நடைபெறும்.

தொடர்ந்து 11 மணிக்கு சபாநாயகர் தனபால் மீது, திமுக சார்பில் கொடுத்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, பின் ஓட்டெடுப்பு நடத்தப்படும். இதில் குறைவான ஓட்டுகள் பெற்றால் அவரது பதவி பறிபோகும்.
துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து சபையை நடத்துவார்.

No-confidence motion will be move against the Speaker by DMK in Tamilnadu assembly on today. The letter was given to the Secretariat of the Assembly

அடுத்த செய்தி