ஆப்நகரம்

ஜெ., மரணத்தில் எனக்கு சந்தேகமா? உண்மையை விளக்குகிறார் திவாகரன்!

விசாரணை ஆணையத்தில் ஆஜரான பின், திவாகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

Samayam Tamil 3 May 2018, 3:25 pm
சென்னை: விசாரணை ஆணையத்தில் ஆஜரான பின், திவாகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
Samayam Tamil Divakaran
திவாகரன்


முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இதன்மூலம் பல்வேறு நபர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு, விளக்கம் பெறப்பட்டு வருகிறது. இந்நிலையில் சசிகலாவின் சகோதரர் திவாகரன், ஆணையத்தில் இன்று ஆஜராகி விளக்கமளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதாவுக்கான சிகிச்சை உள்ளிட்டவை குறித்து ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திடம் தெளிவாக கூறினேன். ஜெயலலிதா டிசம்பர் 4ஆம் தேதியே இறந்து விட்டதாக தகவல் வந்தது.

அதைதான் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திடம் கூறினேன். அப்போலோவிற்கு 2 முறை சென்றும் ஜெயலலிதாவை உயிருடன் பார்க்க முடியவில்லை. இறந்தபின்பே பார்த்தேன்.

சசிகலாவை தவிர வேறு யாரும் ஜெயலலிதாவை அப்போலோவில் பார்க்கவில்லை. ஜெயலலிதா மரணத்தில் எனக்கு சந்தேகம் இல்லை. அவரது மரணம் இயற்கையாகவே நிகழ்ந்தது.

No doubt in Jayalalitha's death says Sasikala brother Divakaran.

அடுத்த செய்தி