ஆப்நகரம்

நினைவிடமாகிறதா ஜெயலலிதா இல்லம்?

ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசு நினைவிடமாக மாற்றினால் பாதிப்படையும் குடும்பங்கள் எதுவும் இல்லை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 6 May 2020, 9:39 am
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
Samayam Tamil நினைவிடமாகிறதா ஜெயலலிதா இல்லம்


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு உயிரிழந்தார். அவர் வாழ்ந்த போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லம் வீட்டை அரசு நினைவிடமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பிடப்பட்ட ஜெயலலிதாவின் வீட்டை அரசு செலவில் நினைவிடமாக மாற்ற தடை விதிக்க வேண்டும்; இது தொடர்பாக பிறப்பிக்கபட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்திருந்தார்.

குடிமகன்களுக்கு ஷாக்: சரக்கு விலை அதிகரிப்பு!

இது ஒருபக்கம் இருக்க தமிழக அரசு வேதா இல்லத்தை அரசு நினைவிடமாக மாற்றும் பணியில் தீவிரம் காட்டிவருகிறது.

இந்நிலையில், “மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை அரசு நினைவிடமாக மாற்றுவதால் பாதிப்படையும் குடும்பங்கள் எதுவும் இல்லை. எனவே யாரையும் அப்புறப்படுத்தவோ, மறுகுடியமர்த்தவோ எந்த அவசியமும் இல்லை.
இது தொடர்பான கோப்புக்களை கிண்டி தாசில்தார் அலுவலகத்தில் பார்வையிடலாம்” என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கேரளாவுக்கு ஏற்றுமதியான கோயம்பேடு கொரோனா: விழுப்புரத்தில் மேலும் பாதிப்பு!

இதனால் நினைவிடமாக மாற்ற நிலம் கையகப்படுத்தப்பட்டதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி