ஆப்நகரம்

வேல்முருகன்: உணவு , நீர் தராமல் காவல்துறையினர் கொடுமைப்படுத்தினர்: வேல்முருகன்!!

அறவழியில் போராட்டம் நடத்தும் தன்னை பலவந்தமாக காவல்துறையினர் கைது செய்ததாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தனது உண்ணவிரதப் போரட்டத்தை தொடர்வதாகவும் கூறினார்.

Samayam Tamil 31 May 2018, 1:14 pm
அறவழியில் போராட்டம் நடத்தும் தன்னை பலவந்தமாக காவல்துறையினர் கைது செய்ததாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தனது உண்ணவிரதப் போரட்டத்தை தொடர்வதாகவும் கூறினார்.
Samayam Tamil df8ff290-c94c-4a0a-b99a-c2daa57fe506


கடந்த மார்ச் மாதம், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்.

இந்தப் போராட்டத்தின் போது, அந்தக் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கினர். இதையடுத்து, வேல்முருகன் உள்ளிட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியைச் சேர்ந்த 13 பேர் மீது விழுப்புரம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது, நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை வேல்முருகனை பார்க்க வந்தார். அப்போது, இந்த வழக்கை காரணம் காட்டி, அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, வேல்முருகன் தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவும், ஸ்டெர்லைட் ஆலையை மூடவும் வலியுறுத்தி புழல் சிறையில் உண்ணாவிரதம் நடத்தி வந்தார். அப்போது, அவருக்கு சிறுநீரக பிரச்சனை ஏற்பட்டதால், ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் நேற்று , சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கியது, இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாகவும் கூறி, அவர் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்ப்பட்டு, அவரை பலவந்தமாக காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவேல்முருகன் இன்று சிறைக்கு செல்வதற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்தபோது, ''காவிரி வாரியம் அமைக்க வேண்டும் என்று அமைதியான முறையில் போராடிய என் மீது காவல்துறையினர் தேச துரோக வழக்குப் பதிவு செய்துள்ளனர். தூத்துக்குடியில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்திட்டமிட்டு காவல்துறை உயர் அதிகாரிகளால் நிகழ்த்தப்பட்டது என்று கூறியதால் காவல்துறையினர் என் மீது கோபம் கொண்டுள்ளனர். மேலும் தூத்துக்குடியில் கொல்லப்பட்டவர்களின்குடும்பத்தையும் , காயமயடைந்தவர்களையும் பார்ப்பதற்காக நான் சென்றபோது என்னை வலுக்கட்டாயமாக காவல்துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடியில் கைது செய்து பாழடைந்த கட்டடத்தில் உணவு, நீர் தராமல் என்னை கொடுமைப்படுத்தினர்

உணவு அருந்தாததாலும், சிகிச்சை எடுத்துக் கொள்ளாததாலும் என் உடல் சோர்ந்து விட்டது'' என்றார்.

அடுத்த செய்தி