ஆப்நகரம்

இனிமேல் இந்த மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி கிடையாது: பள்ளிக்கல்வித் துறை

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் 2012ஆம் ஆண்டிலிருந்து நடைமுறையில் உள்ளது. இதன் படி 12 ஆம் வகுப்பு படிக்கும் அரசுப்பளி மாணச மாணவியருக்க்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட்டு வந்தது.

Samayam Tamil 10 Nov 2019, 8:08 am
தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் 2012ஆம் ஆண்டிலிருந்து நடைமுறையில் உள்ளது. இதன் படி 12 ஆம் வகுப்பு படிக்கும் அரசுப்பளி மாணச மாணவியருக்க்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட்டு வந்தது.
Samayam Tamil laptop


இந்நிலையில், 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் இந்த திட்டமும் வருகிறது என்றாலும், மடிக்கணினி திட்டம் அவற்றுள் பெரும் பொருட்செலவை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது. அந்த வகையில் மாணவர்களுக்கு வழங்கப்படும் திட்டங்களில் ஒன்றுதான் இலவச மடிக்கணினி திட்டம் குறித்த தகவலை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித்துறையினர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் 12-ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் மற்றும் பள்ளி படிப்பை கைவிட்டவ மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி