ஆப்நகரம்

தங்கச்சிலையில் தங்கம் இல்லை: ஏகாம்பரநாதர் கோயிலில் அதிர்ச்சி!

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் புதிதாக செய்யப்பட்ட தங்கச் சிலைகளில் தங்கம் சேர்க்கப்படவில்லை என அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

TNN & Agencies 3 Jan 2018, 10:04 am
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் புதிதாக செய்யப்பட்ட தங்கச் சிலைகளில் தங்கம் சேர்க்கப்படவில்லை என அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil no gold added in gold statue in kanchipuram ekambaranathar temple
தங்கச்சிலையில் தங்கம் இல்லை: ஏகாம்பரநாதர் கோயிலில் அதிர்ச்சி!


காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் கடந்த 2015ல் சோமாஸ்கந்தர் சிலை புதியதாக பிரதிஷ்டை செய்யப்பட்டது. பழைய சிலை சின்னாபின்னமாகிவிட்டதை தொடர்ந்து. ஐந்தே முக்கால் கிலோ தங்கத்தில் சோமாஸ்கந்தர் சிலை உருவாக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இதில் முறைகேடு நடந்திருப்பதாக காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் அண்ணாமலை தொடர்ந்த வழக்கில் விசாரணை மேற்கொண்டு அறிக்கை அளிக்க நீதிபதி உத்திரவிட்டார். இந்த வழக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.
இதுதொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி ரகுபதி தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் ஏகாம்பரநாதர் கோயில்களில் உள்ள சிலைகள் தொடர்பாக சோதனை நடத்தினர்.

ஐந்து மணி நேரம் நடந்த விசாரணைக்கு பின் பேசிய வீரமணி புதிதாக செய்யப்பட்ட சோமாஸ்கந்தர், ஏலவார் குழலி சிலைகளில் தங்கம் எதுவும் சேர்க்கப்படவில்லை. சிலை செய்ய மக்களிடம் எவ்வளவு தங்கம் வசூலிக்கப்பட்டது? சிலையில் எவ்வளவு தங்கம் சேர்க்கப்பட்டது என போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

no gold added in gold statue in kanchipuram ekambaranathar temple

அடுத்த செய்தி