ஆப்நகரம்

சென்னை - சேலம் பசுமைவழிச்சாலைக்கு எந்த மலையும் குடையப்படாது: தமிழிசை உறுதி!

பசுமைவழிச்சாலைக்கு மலைகள் பாதிக்கப்படாது என்று தமிழிசை உறுதியளித்துள்ளார்.

Samayam Tamil 28 Jun 2018, 9:03 pm
டெல்லி: பசுமைவழிச்சாலைக்கு மலைகள் பாதிக்கப்படாது என்று தமிழிசை உறுதியளித்துள்ளார்.
Samayam Tamil Tamilisai.
தமிழிசை சவுந்திரராஜன்


மத்திய அரசின் பாரத்மாலா பிரயோஜனா திட்டத்தின் கீழ், ரூ.10,000 கோடி மதிப்பில், சென்னை - சேலம் இடையே 8 வழி பசுமைவழிச் சாலை அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த சாலையின் மொத்த தூரம் 277.3 கிலோமீட்டர் ஆகும்.

சென்னை அருகே உள்ள தாம்பரம் முதல் சேலம் அருகே அரியானூர் வரை 8 வழிச் சாலை அமைக்கப்பட உள்ளது. இது காஞ்சிபுரத்தில் 59.1 கிமீ, திருவண்ணாமலையில் 123.9 கிமீ, கிருஷ்ணகிரியில் 2 கிமீ, தருமபுரியில் 56 கிமீ, மற்றும் சேலத்தில் 36.3 கிமீ வழியாக செல்கிறது.

இந்த சாலை அமைக்க 30 மீட்டர் அகலத்திற்கு, மொத்தம் சுமார் 2,200 ஹெக்டே அளவிற்கு நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும்.

அவ்வாறு செய்யும் போது, சம்பந்தப்பட்ட நிலங்களில் உள்ள சுமார் 40,000 வீடுகள், கட்டிடங்கள், தொழிற்சாலைகள் இடிக்கப்படும். இதற்கு ஏராளமான விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை, டெல்லி சென்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரியை சந்தித்து பேசினார். அப்போது சென்னை - சேலம் 8 வழிச்சாலை குறித்து ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, பசுமை வழிச் சாலை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வலியுறுத்தினேன். போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால், இந்த திட்டம் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது.

பசுமை வழிச்சாலை அமைக்க எந்தவொரு மலையும் பாதிக்கப்படாது. எங்கேயும் மலைகள் குடையப்படாது என்று தமிழிசை உறுதியளித்தார்.

No hills will be affected in Chennai - Salem greenways road construction says Tamilisai.

அடுத்த செய்தி