ஜல்லிக்கட்டு போராட்டகாரர்கள் மீது போலீஸ் தடியடிக்கு உத்தரவிடவில்லை என்று முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கொந்தளித்து எழுந்தனர். தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்தது. மெரினாவில் நடந்த இந்தப் போராட்டம் உலக அளவில் கவனத்தை ஈர்த்தது. மெரினாவில் தொடர்ந்து 6 நாட்கள் நடந்த போராட்டத்தில் சுமார் 7 லட்சம் பேர் கலந்து கொண்டனர். ஆனால், கட்டுக்கோப்பாக அமைதியாக இந்தப் போராட்டம் நடந்தது.
அப்போது தமிழகத்தின் முதல்வராக இருந்த பன்னீர் செல்வம் தங்களை சந்தித்து பேச மெரினாவுக்கு வர வேண்டும் என்று போராட்டக்குழுவினர் கேட்டுக் கொண்டு இருந்தனர். ஆனால், அவர் வரவில்லை. போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும். நாங்கள் சிறப்பு சட்டம் கொண்டு வர அனைத்து முயற்சிகளையும் எடுக்கிறோம் என்று தெரிவித்து இருந்தார்.
அதன்படி சட்டமும் கொண்டு வந்து சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானம் கொண்டு வரும் நாளன்று காலை மெரினாவில் கூடியிருந்த மாணவர்களை, இளைஞர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் கேட்டுக் கொண்டனர். அவர்கள் கலைந்து செல்ல போதிய நேரமும் கொடுக்காமல், போலீசார் தடியடி நடத்தினர். இது தமிழகம் முழுவதும் எதிரொலித்து, ஆங்காங்கே பிரச்சனைகள் வெடித்தது.
இதுகுறித்து இன்று தனியார் தொலைக்காட்சியான புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில் பன்னீர் செல்வம் கூறுகையில், ''ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்த எந்த உத்தரவையும் போலீசாருக்கு நான் பிறப்பிக்கவில்லை'' என்று தெரிவித்தார்.
No lathi charge order from Tamil Nadu Government on Jallikattu protesters: EX CM Panneer Selvam
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கொந்தளித்து எழுந்தனர். தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்தது. மெரினாவில் நடந்த இந்தப் போராட்டம் உலக அளவில் கவனத்தை ஈர்த்தது. மெரினாவில் தொடர்ந்து 6 நாட்கள் நடந்த போராட்டத்தில் சுமார் 7 லட்சம் பேர் கலந்து கொண்டனர். ஆனால், கட்டுக்கோப்பாக அமைதியாக இந்தப் போராட்டம் நடந்தது.
அப்போது தமிழகத்தின் முதல்வராக இருந்த பன்னீர் செல்வம் தங்களை சந்தித்து பேச மெரினாவுக்கு வர வேண்டும் என்று போராட்டக்குழுவினர் கேட்டுக் கொண்டு இருந்தனர். ஆனால், அவர் வரவில்லை. போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும். நாங்கள் சிறப்பு சட்டம் கொண்டு வர அனைத்து முயற்சிகளையும் எடுக்கிறோம் என்று தெரிவித்து இருந்தார்.
அதன்படி சட்டமும் கொண்டு வந்து சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானம் கொண்டு வரும் நாளன்று காலை மெரினாவில் கூடியிருந்த மாணவர்களை, இளைஞர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் கேட்டுக் கொண்டனர். அவர்கள் கலைந்து செல்ல போதிய நேரமும் கொடுக்காமல், போலீசார் தடியடி நடத்தினர். இது தமிழகம் முழுவதும் எதிரொலித்து, ஆங்காங்கே பிரச்சனைகள் வெடித்தது.
இதுகுறித்து இன்று தனியார் தொலைக்காட்சியான புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில் பன்னீர் செல்வம் கூறுகையில், ''ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்த எந்த உத்தரவையும் போலீசாருக்கு நான் பிறப்பிக்கவில்லை'' என்று தெரிவித்தார்.
No lathi charge order from Tamil Nadu Government on Jallikattu protesters: EX CM Panneer Selvam