ஆப்நகரம்

கோகுல் ராஜ் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை தேவையில்லை : சென்னை உயர்நீதிமன்றம்

கோகுல்ராஜ் கொலை வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

TOI Contributor 29 Jun 2016, 9:27 pm
கோகுல்ராஜ் கொலை வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
Samayam Tamil no need cbi investigation for gokul raj murder
கோகுல் ராஜ் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை தேவையில்லை : சென்னை உயர்நீதிமன்றம்


சேலம் : பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் மாற்று சாதி பெண்ணை காதலித்ததற்காக கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, திருச்செங்கோடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். அதன்பின்னர் இந்த வழக்கானது சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. ஆனால் விசாரணை முறையாக செய்யப்படவில்லை என்றும், சிபிஐ-க்கு இந்த வழக்கை மாற்றக்கோரி கோகுல்ராஜின் தாயார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனை விசாரித்த நீதிபதிகள், வழக்கு தொடர்பான சி.பி.சி.ஐ.டி விசாரணை சரியாகவே செல்கிறது என்றும், சிபிஐ-க்கு வழக்கை மாற்றத்தேவையில்லை என்றும் உத்தரவிட்டனர்.

அடுத்த செய்தி