ஆப்நகரம்

பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை: துணை சபாநாயகர்!

சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை என்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

TNN 14 Sep 2017, 2:44 pm
சென்னை: சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை என்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil no need for floor test says depy speaker
பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை: துணை சபாநாயகர்!


ஈபிஎஸ் - ஓபிஎஸ் அணிகள் இணைப்பால், டிடிவி தரப்பு தீவிரமாக எதிர்ப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

முதலமைச்சருக்கு தங்கள் ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்து, பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுமாறு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் அளித்தனர். இதனைத் தொடந்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

முன்னதாக திமுக சார்பில், தமிழக அரசை பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் சட்டமன்றத்தில் மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடிய சூழல் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், முதலமைச்சர் பழனிச்சாமி தலைமையிலான ஆட்சிக்கு பெரும்பான்மை உள்ளது.

இந்த நல்லாட்சிக்கு களங்கம் விளைவிக்க மு.க.ஸ்டாலின் நினைக்கிறார். சட்டமன்றத்தில் திமுக ஏற்கன்வே கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் என்ன ஆயிற்று? என்று கேள்வி எழுப்பினார்.

ஏற்கனவே தமிழக அரசு பெரும்பான்மையை நிரூபித்துவிட்டதால், மீண்டும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. டிடிவி அணியுடனான கருத்து வேறுபாடு என்பது, உள்கட்சி பிரச்சனை.

ஆனால் ஆட்சிக்கு பிரச்சனை வந்தால், அனைவரும் ஒன்று சேர்ந்து விடுவோம் என்று பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார்.

No need for floor test says depy speaker.

அடுத்த செய்தி