ஆப்நகரம்

காற்று மாசுபாட்டால் பாதிப்பு இல்லை: அமைச்சர் உதயகுமார் பேட்டி!

சென்னையில் காற்று மாசு ஏற்பட்டுள்ளது குறித்து வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார்.

Samayam Tamil 11 Nov 2019, 1:04 pm
சென்னையில் கடந்த சில நாள்களாக காற்று மாசு அதிகரித்திருந்த நிலையில் இன்று வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார் சென்னை எழிலகத்தில் மாநில அவசர கட்டுப்பாடு அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
Samayam Tamil காற்று மாசுபாட்டால் பாதிப்பு இல்லை


டெல்லியில் காற்று மாசுபாடு இயல்பு வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. பெரு நகரங்களில் இத்தகைய பாதிப்பு இனிவரும் காலங்களில் அதிகளவில் ஏற்படும் என எதிர்பார்த்திருந்தபோது சென்னையில் காற்று மாசு அதிகரித்தது.

நம்புங்க இது டில்லி இல்லை, சென்னை தான்: அப்புறம் உங்க முகமூடியை மறந்துடாதீங்க!

மணலி, வேளச்சேரி, ஆலந்தூர் ஆகிய இடங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டன. இது குறித்து சூழலியலாளர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சென்னையைச் சுற்றி அனல் மின்நிலையங்கள், தொழிற்சாலைகள் அதிகம் இருப்பது இந்த பாதிப்புக்கான காரணமாக கூறப்பட்டது. அதிகரித்துவரும் வாகனங்களின் எண்ணிக்கை, கட்டுமான பணிகளின் போது ஏற்படும் தூசி, புகை ஆகியவும் காற்று மாசு ஏற்படுவதற்கான காரணங்களாக கூறப்படுகிறது. அதே போல் சென்னையில் நுரையீரல் தொடர்பான நோய்கள் அதிகரித்திருப்பதாக பல்வேறு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

காற்று மாசு: டெல்லியை மிஞ்சிய சென்னை - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்!

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் உதயகுமார், “புல் புல் புயல் காரணமாக மேகம் கீழ் இறங்கி காணப்படுகிறது. இதனால் சூரியக் கதிர் அதிகளவில் உள்ளே வரமுடியவில்லை. கடற்காற்றும் குறைந்துள்ளது. இதனால் காற்று மாசு அதிகரித்துள்ளது. காற்று மாசை அளவிடும் மையங்கள் தமிழ்நாடு முழுவதும் 28 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் இந்த மையங்கள் 8 இடங்களில் உள்ளன. இவற்றில் சில இடங்களில் மட்டும் காற்று மாசு தரக்குறியீட்டு எண் 200ஐ கடந்துள்ளது.

சென்னை: புகை மண்டலம் இன்னும் எத்தனை நாட்களுக்கு இருக்கும் தெரியுமா?

இதனால் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. பருவகால மாற்றத்தால் சுவாசக்கோளாறு ஏற்பட்டுள்ளது. காற்று மாசுபாட்டால் ஏற்படவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி