ஆப்நகரம்

வழியனுப்ப யாரும் வர வேண்டாம்: விஜயகாந்த்!

மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் தன்னை வழியனுப்ப யாரும் வரவேண்டாம் என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 5 Jul 2018, 3:11 pm
மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் தன்னை வழியனுப்ப யாரும் வரவேண்டாம் என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil vijay


தே.மு.தி.க. தலைவைா் விஜயகாந்த் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். வேகமாக நடக்க முடியாமலும், நீண்ட நேரம் பேச முடியாமலும் இருந்தார். இதன் காரணமாக சிகிச்சைக்காக அவ்வப்போது சிங்கப்பூருக்கு சென்று வந்தார். அப்படியிருந்தும், அவரது உடல் நிலையில், மாற்றம் ஏற்படவில்லை.

இந்த நிலையில், வரும் 7ம் தேதி விஜயகாந்த் சிகிச்சைக்காக அமெரிக்க செல்லயிருக்கிறார். அவருடன் இணைந்து அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் மற்றும் மகன் ஆகியோர் செல்ல இருக்கின்றனர். இதன் காரணமாக, தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கூறியிருப்பதாவது: வரும் சனிக்கிழமையன்று சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லயிருப்பதாகவும், வழியனுப்ப கட்சித் தொண்டகர்கள் மற்றும் நிர்வாகிகள் யாரும் விமான நிலையம் வர வேண்டாம் என்று கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

மருத்துவ சிகிச்சைக்காக கேப்டன் விஜயகாந்த் 7ம் தேதி அமெரிக்கா பயணம்


இதற்கு முன்னதாக, விஜயகாந்த் சிகிச்சைக்காக வெளிநாடு செல்லும் போதெல்லாம் அவரது தொண்டர்கள் விமான நிலையம் சென்று வழியனுப்புவதை வாடிக்கையாக கொண்டிருந்தனர். ஆனால், இந்த முறை விஜய்காந்த் வரவேண்டாம் என்று கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார். இதனை அவரது தொண்டர்கள் ஏற்பார்களா? என்பது கேள்குறி தான்.

அடுத்த செய்தி