ஆப்நகரம்

சத்துணவு மையங்களை மூடும் திட்டமா? சமூக நலத்துறை முக்கிய விளக்கம்!

சென்னை: சத்துணவு மையங்களை மூடும் திட்டமில்லை என்று சமூக நலத்துறை விளக்கம் அளித்துள்ளது.

Samayam Tamil 25 Dec 2018, 8:20 pm
தமிழகம் முழுவதும் 42,000 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சத்துணவு மையங்கள் செயல்பட்டு கொண்டிருக்கின்றன.
Samayam Tamil Sathunuvu Koodam


ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையும், ஆறாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தனித்தனி சத்துணவுக் கூடங்கள் இயங்கி வருகின்றன. இவை அனைத்தையும் ஒரே மையமாக இயங்கச் செய்ய அறிவுறுத்தப் பட்டுள்ளது.

இதுகுறித்து சமூக நலத்துறை ஆணையர் அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், இணைக்கப்பட்ட சத்துணவுக் கூடங்களால் கூடுதலாக சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் உதவியாளர்கள் இருப்பர்.

அவர்கள் காலியாக உள்ள இடங்களில் பணியமர்த்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் 25 குழந்தைகளுக்கு கீழ் பயிலும் பள்ளிகளில் சத்துணவு மையங்களை மூட எந்த திட்டமும் பரிசீலனையில் இல்லை என்று சமூக நலத்துறை தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி