வங்கிகளில் யாராவது தவறுதலாக இடது கையில் மை வைத்துக் கொண்டால் நாளை மறுநாள் நடைபெற உள்ள மூன்று தொகுதி தேர்தலில் வாக்களிக்க முடியாது எனவும் இந்த தொகுதிகளில் தபால் வாக்குப்பதிவு கிடையாது எனவும் தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தஞ்சாவூர்,அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளில் நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ளது.இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மூன்று தொகுதிகளில் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன.
பொதுவாக தேர்தலில் வாக்களிப்பவர்களுக்கு இடது கை ஆள்காட்டி விரலில் அழியாத மை வைக்கப்படுவது வழக்கம்.இந்நிலையில் ஒருவர் அடிக்கடி பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்றுவதை தவிர்ப்பதற்காக,வங்கியில் பணம் மாற்றுபவர்களின் இடது கை ஆள்காட்டி விரலில் மை வைக்கப்படும் என இரண்டு நாட்களுக்கு முன்னர் மத்திய நிதி அமைச்சகம் அறிவித்தது.
தமிழகத்தில் உள்ள மூன்று தொகுதிகளில் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறுவதால்,தமிழகத்தில் உள்ள வங்கிகளுக்கு வரும் மக்களுக்கு வலது கையில் மை வைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இடைத்தேர்தல் நடைபெற மூன்று தொகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்களுக்கு வங்கி ஊழியர்கள் தவறுதலாக இடது கையில் மை வைத்து விட்டால்,அவர்கள் தேர்தலில் வாக்களிக்க முடியாது என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியான ராஜேஷ் லக்கானி அறிவித்துள்ளார்.
மேலும் தமிழக இடைத்தேர்தல் நடைபெறும் மூன்று தொகுதிகளிலும் தபால் வாக்குகள் கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் வங்கி ஊழியர்கள் கவனக்குறைவாக செயல்பட்டு கை மாற்றி மை வைத்தால்,அவர்கள் தேர்தலில் வாக்களிக்க முடியாது என்பதால் வங்கிக்கு செல்லும் மக்கள் கவனமாக இருப்பது அவசியம்.
No postal vote in three constituency by poll in Taminadu-Rajesh lakani
தஞ்சாவூர்,அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளில் நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ளது.இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மூன்று தொகுதிகளில் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன.
பொதுவாக தேர்தலில் வாக்களிப்பவர்களுக்கு இடது கை ஆள்காட்டி விரலில் அழியாத மை வைக்கப்படுவது வழக்கம்.இந்நிலையில் ஒருவர் அடிக்கடி பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்றுவதை தவிர்ப்பதற்காக,வங்கியில் பணம் மாற்றுபவர்களின் இடது கை ஆள்காட்டி விரலில் மை வைக்கப்படும் என இரண்டு நாட்களுக்கு முன்னர் மத்திய நிதி அமைச்சகம் அறிவித்தது.
தமிழகத்தில் உள்ள மூன்று தொகுதிகளில் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறுவதால்,தமிழகத்தில் உள்ள வங்கிகளுக்கு வரும் மக்களுக்கு வலது கையில் மை வைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இடைத்தேர்தல் நடைபெற மூன்று தொகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்களுக்கு வங்கி ஊழியர்கள் தவறுதலாக இடது கையில் மை வைத்து விட்டால்,அவர்கள் தேர்தலில் வாக்களிக்க முடியாது என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியான ராஜேஷ் லக்கானி அறிவித்துள்ளார்.
மேலும் தமிழக இடைத்தேர்தல் நடைபெறும் மூன்று தொகுதிகளிலும் தபால் வாக்குகள் கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் வங்கி ஊழியர்கள் கவனக்குறைவாக செயல்பட்டு கை மாற்றி மை வைத்தால்,அவர்கள் தேர்தலில் வாக்களிக்க முடியாது என்பதால் வங்கிக்கு செல்லும் மக்கள் கவனமாக இருப்பது அவசியம்.
No postal vote in three constituency by poll in Taminadu-Rajesh lakani