ஆப்நகரம்

தமிழகத்தில் உள்ள ஆட்சிக்கும், கட்சிக்கும் தொடர்பு இல்லை: டிடிவி தினகரன்...!

தமிழகத்தில் நடைபெற்று வரும் ஆட்சிக்கும், அதிமுக கட்சிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

TNN 16 Aug 2017, 12:05 pm
சென்னை: தமிழகத்தில் நடைபெற்று வரும் ஆட்சிக்கும், அதிமுக கட்சிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil no relation between tn govt and party says ttv
தமிழகத்தில் உள்ள ஆட்சிக்கும், கட்சிக்கும் தொடர்பு இல்லை: டிடிவி தினகரன்...!


வெளிநாட்டு நிதி மோசடி தொடர்பாக, டிடிவி தினகரன் மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு விசாரணையில் டிடிவி தினகரன் இன்று ஆஜரானார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி, தமிழகத்தில் நடைபெற்று வரும் ஆட்சிக்கும், கட்சிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று தெரிவித்தார்.

அமைச்சர்கள் ஜெயலலிதா வழியில் செல்லவில்லை என்றால் ஆபத்து நிச்சயம் என்றும் குறிப்பிட்டார். கட்சியை கொல்லப்புறமாக கைப்பற்றும் முயற்சியில் சில அமைச்சர்கள், நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.

மக்களுக்கு திருடர்கள் யார் என்பது தெள்ளத் தெளிவாக தெரியும் என்றார். மேலும் சசிகலா காலில் விழுந்து விழுந்தவர் திண்டுக்கல் சீனிவாசன் என்றும், அவர் பதவி விலகிவிட்டு பேச வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

மேலூர் பொதுக்கூட்டம் மாபெரும் வெற்றி என்றும், தொண்டர்களின் எண்ணம் தான் தங்களின் வேதவாக்கு என்றும் தெரிவித்தார். அதைத் தான் நாங்கள் செயல்படுத்துவோம் என்றும் கூறினார்.

ஓபிஎஸ் காலில் விழுந்து ஒன்று சேரத் துடிப்பதாகவும், வழிமாறி செல்பவர்கள் திருத்தப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டார். நடிகர் கமல்ஹாசன் கேள்விக்கு முதலமைச்சர் தான் பதிலளிக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறினார்.

No relation between TN Govt and Party says TTV.

அடுத்த செய்தி