ஆப்நகரம்

மழையின்றி சபிக்கப்பட்டதா சென்னை நகரம்? வெதா்மேன் சொல்லும் 20 வருட வரலாறு

கத்தரி வெயில் நிறைவடைந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்பச்சலனம் காரணமாக அவ்வபோது இடியுடன் கூடிய மழை பெய்து வரும் நிலையில் கடந்த 180 நாட்களாக சென்னையில் மழை பெய்யவில்லை என வெதா்மேன் குறிப்பிட்டுள்ளாா்.

Samayam Tamil 7 Jun 2019, 8:33 am
சென்னை நகரத்தில் கடந்த 6 மாதங்களில் ஒருமுறை கூட 12 மிமீ அளவில் மழை பெய்யவில்லை. இதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று சென்னை வெதா்மேன் வினவியுள்ளாா்.
Samayam Tamil Weather Man


தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் கடந்த மே மாதம் 4ம் தேதி தொடங்கி 28ம் தேதி நிறைவடைந்தது. அக்னி நட்சத்திரம் நிறைவடைந்து சுமாா் 10 நாட்களாகிவிட்ட நிலையில் சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது.

தென்மேற்கு பருவமழையும் தொடா்ந்து தள்ளிப்போகிறது. ஆனால் சற்று ஆறுதல்ப்படும் விதமாக வெப்பச்சலனத்தால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அவ்வபோது இடியுடன் கூடிய மிதமான மழை பெய்து சற்று வெப்பத்தை தணிக்கிறது. இருப்பினும் தலைநகா் சென்னையில் மட்டும் மழை பெய்தபாடில்லை.

இந்நிலையில் தனியாா் வானிலை ஆய்வு மைய அதிகாாி வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், சென்னையில் கடந்த 180 நாட்களில் ஒருமுறை கூட 12 மி.மீ. அளவில் கூட மழை பெய்யவில்லை. இதற்கு என்ன காரணமாக இருக்கும்? சென்னை சபிக்கப்பட்டதா, மழை வராததற்கு மரம் காரணமா அல்லது மக்கள் காரணமா? என வினவியுள்ளாா்.


மேலும், சென்னையை தவிா்த்து பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வரும் நிலையில், சென்னை மட்டும் மழையின்றி அமைதியாக இருப்பதாக கூறி கடந்த காலத்தில் சென்னை இதுபோன்று மழையின்றி தவித்த 20 ஆண்டுகால வரலாற்றை குறிப்பிட்டுள்ளாா்.

அடுத்த செய்தி