ஆப்நகரம்

இன்றே கடைசி; மேட்டூர் அணையில் இருந்து இனி தண்ணீர் கிடையாது!

அறுவடை தொடங்கவுள்ளதால் மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ள நீர் இன்று மாலையுடன் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 28 Jan 2020, 1:58 pm
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக ஆண்டுதோறும் ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இதன்மூலம் அடுத்த ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி வரை தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
Samayam Tamil Mettur Dam


இதனால் சேலம், நாமக்கல், ஈரோடு மற்றும் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த 16.05 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பல்வேறு மாவட்டங்களின் குடிநீர், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் தேவையும் பூர்த்தி செய்யப்படுகிறது.

அவ்வளவு தான் தண்ணீர்; மூடப்படுகிறது மேட்டூர் அணை- விவசாயிகள் தேவை பூர்த்தியானதா?

கடந்த ஆண்டு ஜூன் மாதம் மேட்டூர் அணையில் போதிய நீர் இல்லை. இதனால் காலம் தாழ்த்தி ஆகஸ்ட் 13ஆம் தேதி அன்று தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அப்போது அணை நீர்மட்டம் 101.22 அடியாகவும், நீர் இருப்பு 66.43 டி.எம்.சியாகவும் இருந்தது.

அதன்பிறகு பருவமழை காரணமாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்தது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. கடந்த ஆண்டில் மட்டும் நான்கு முறை அணை முழு கொள்ளளவை எட்டியது.

கர்நாடகா கடந்த ஆண்டு கூடுதலாக 85 டி.எம்.சி வழங்கியது குறிப்பிடத்தக்கது. தற்போது 169 நாட்களாக 150 டி.எம்.சி தண்ணீர் டெல்டா பாசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. அறுவடை நெருங்குவதால் நீர்திறப்பு குறைக்கப்பட்டு வந்தது.

ஆச்சரியமாய் சரிந்த வெங்காயத்தின் விலை - இல்லத்தரசிகள் செம ஹேப்பி!

இந்நிலையில் இன்று மாலையுடன் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டு மேட்டூர் அணை மூடப்படும். ஒருவேளை விவசாயிகள் கோரிக்கை விடுக்கும்பட்சத்தில் மேலும் சில நாட்கள் தண்ணீர் திறக்கப்படுவது குறித்து மாநில அரசு ஆலோசிக்கும்.

தற்போதைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 102 அடியாக உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 310 கன அடியாகவும், நீர் திறப்பு 2,000 கன அடியாகவும் இருக்கிறது.

அடுத்த செய்தி