ஆப்நகரம்

2019ஆம் ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசுகள் அறிவிப்பு

உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான நோபல் பரிசுக்கான 2019 ஆம் ஆண்டின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.

Samayam Tamil 9 Oct 2019, 4:00 pm
உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான நோபல் பரிசுக்கான 2019 ஆம் ஆண்டின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.
Samayam Tamil nobel for chemistry 2019 announced today
2019ஆம் ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசுகள் அறிவிப்பு


கடந்த 7 ஆம் தேதி மற்றும் 8 ஆம் தேதிகளில் ஒவ்வொரு துறையாக அறிவிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று வேதியியல் துறைக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஸ்டாலினுக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும்: முதல்வர் நக்கல்

இயற்பியல் துறையைப்போலவே வேதியியல் துறையிலும் , மூவருக்கு நோபல் பரிசு இந்த ஆண்டு வழங்கப்படவுள்ளது.

ஜான் பி. குடெனாஃப் , எம். ஸ்டான்லி விட்டிங்காம் மற்றும் அகிரா யோஷினோ ஆகிய முவரும் இந்த பரிசை வென்றதாக நோபல் பரிசு கமிட்டி அறிவித்துள்ளது.



மேம்படுத்தப்பட்ட லித்தியம் அயனி மின்கலம் மீதான இவர்களது ஆய்வுமுடிவை பாராட்டி நோபல் பரிசு அளிக்கப்படுகிறது. 1901 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் நோபல் கமிட்டியிடமிருந்து, இதுவரை 183 பேர் வேதியியலுக்காக நோபல் பரிசு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு கூட்டாக அறிவிப்பு

இன்னும் அடுத்தடுத்த நாட்களில் இலக்கியம், சமாதானம் ஆகிய துறைகளுக்கும் விருதுகள் அறிவிக்கப்படவுள்ளன.

அடுத்த செய்தி