ஆப்நகரம்

போட்டியின்றி தேர்வாகிறார்களா துரைமுருகன், டி.ஆர்.பாலு?

திமுக பொருளாளர், பொதுச் செயலாலர் பதவிகளுக்கு துரைமுருகன், டி.ஆர்.பாலு பெயரில் வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 3 Sep 2020, 1:05 pm
திமுகவில் பொருளாளர், பொதுச்செயலாளர் பதவிகளுக்கு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படவுள்ள நிலையில் பொதுக்குழு கூட்டம் செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெறவுள்ளது.
Samayam Tamil dmk


இந்த பொதுக்குழு கூட்டத்துக்கான ஒருங்கிணைப்பு குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது.

அதே சமயம் பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று முதல் நடைபெறுகின்றன.

பொதுச் செயலாளர் ரேஸில் முந்துவது யார்? திமுகவுக்குள் நடந்தது என்ன?

ஆலந்தூர் எம்.எல்.ஏ தா.மோ.அன்பரசன், தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் எம்.எல்.ஏ கருணாநிதி ஆகியோர் பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கு முறையே துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகியோர் பெயர்களில் அண்ணா அறிவாலயத்தில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதியிடம் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்.

அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள் காஞ்சிபுரம் மாவட்ட திமுக சார்பில் ஒருமனதாக இருவர் பெயரிலும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

மாவட்டம் மாவட்டமாக சுற்றும் முதல்வர்: இதுக்கு பின்னால இவ்ளோ காரணம் இருக்கா?

பின்னர் துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகியோர் அண்ணா அறிவாலயம் வந்தனர். பகல் 1 மணியளவில் டி.ஆர்.பாலு வேட்பு மனு தாக்கல் செய்தார். அடுத்ததாக துரைமுருகன் நேரடியாக வேட்பு மனுத்தாக்கல் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த இரு பதவிகளுக்கும் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த செய்தி