ஆப்நகரம்

நித்தியானந்தாவுக்கு ஜாமீன் இல்லா பிடிவாரண்ட் பிறபித்து நீதிபதி உத்தரவு !

பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆஜராகாத நித்தியானந்தாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 7 Sep 2018, 10:39 am
பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆஜராகாத நித்தியானந்தாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil internationa-yoga-day001


நித்தியானந்தாவுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகர்நாடக மாநிலத்தில் உள்ள ராமநகர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. இந்த வழக்குவிசாரணைக்காக கடந்த ஜூன் 6 ஆம் தேதிக்கு பிறகு, நித்தியானந்தா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

இந்நிலையில் இந்த வழக்குநேற்று விசாரணைக்கு வந்தபோது, நித்யானந்தா நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி அவரதுவழக்கறிஞர் மனுதாக்கல் செய்தார்.

நித்தியானந்தா வடமாநிலங்களில் ஆன்மீக சுற்றுப் பயணத்தில் இருப்பதால் ஆஜராக முடியவில்லை என்றுஅவரின் வழக்கறிஞர் தெரிவித்திருந்தார்.இதனை நீதிபதி ஏற்க மறுத்தார். தொடர்ந்து 3 வது முறையாக விசாரணைக்கு ஆஜர் ஆகாததால் , நித்தியானந்தாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டை நீதிபதி பிறப்பித்தார்.

பின்னர் வழக்குவிசாரணையை வரும் 14 ஆம் தேதிக்குஒத்திவைத்தார். நீதிமன்ற உத்தரவையடுத்து நித்தியானந்தாவை கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி