ஆப்நகரம்

மின்வாரியம் கடன் பாக்கி செலுத்தாதது தான் மின் தடைக்கு காரணமா?

மின்வாரியம் கடன் பாக்கி செலுத்தாதது தான் மின் தடைக்கு காரணமா?

TOI Contributor 27 Apr 2017, 9:26 am
வட சென்னையின் பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டு பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள். அதிகாலை வரை மின்தடை நீடித்த நிலையில், தண்டையார் பேட்டையில் ஏற்பட்ட மின் பழுது காரணமாக மின்தடை ஏற்பட்டது என்றும், பழுது பார்க்கும் பணி முடிந்ததும் மின் விநியோகம் சீராகும் என்றும் மின்துறை அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்தார்.
Samayam Tamil north chennai power cut issue
மின்வாரியம் கடன் பாக்கி செலுத்தாதது தான் மின் தடைக்கு காரணமா?


நேற்றி இரவு 8 மணிக்கு வேப்பேரி, அண்ணாசாலை, தண்டையார் பேட்டை, புதுப்பேட்டை, அண்ணாநகர், புளியந்தோப்பு, ராயபுரம் பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. வெளில் காலம் என்பதால் இரவிலும் உஷ்ணம் இருக்கும் நிலையில் வெப்பம் தாங்காமல் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளானார்கள். நள்ளிரவு 2 மணிக்கு மீண்டும் மின் விநியோகம் தொடங்கியது.

வல்லூர் அனல் மின் நிலையத்திற்கு தமிழக அரசு செலுத்த வேண்டிய கடன் பாக்கி நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு மின்வாரியம் ரூ.1156 கோடி கடன் பாக்கியை வல்லூர் அனல் மின் நிலையத்திற்கு செலுத்த வேண்டி உள்ளது. அதனை செலுத்தாததால் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிவிட்டு மின் தடை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மின் தடைக்கு தண்டையார் பேட்டை துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட பழுது தான் காரணம் என்று மின்சாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த செய்தி