ஆப்நகரம்

Chennai Rains: 2020க்கு நீளும் பருவமழை; அடுத்து ஒரு ரவுண்ட் காத்திருக்கு- தயாரா இருங்க மக்களே!

காற்றின் திசை, வேகம் மாறி இருப்பதால் வரும் ஜனவரி மாதம் வரை வடகிழக்கு பருவமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 26 Dec 2019, 12:24 pm
தமிழகத்திற்கு தென்மேற்கு பருவமழை வாரி, வாரி வழங்கியது. வறண்டு கிடந்த பூமியை புத்துணர்ச்சி பெறச் செய்து நீர்நிலைகளை தலைநிமிரச் செய்தது. இதற்கடுத்த வந்த வடகிழக்கு பருவமழை தமிழகத்திற்கு நேரடியாக மழையை தரக் கூடியது.
Samayam Tamil Rain5


எனவே தென்மேற்கு பருவமழையை விட அதிகளவு பொழியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தொடக்கத்தில் நல்ல மழை பெய்தாலும் இடையில் ஏற்பட்ட புயல்கள் காரணமாக சற்றே பின்னடைவை சந்தித்தது.

சுனாமி கோரத் தாண்டவத்தின் 15ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று..!

இருப்பினும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்தது. 22 மாவட்டங்களில் இயல்பை விட அதிக மழை பெய்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

அதில் விருதுநகர், நீலகிரி, தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக அதிக மழை பெய்துள்ளது. அதாவது,

மாவட்டம்இயல்பான அளவுபெய்த மழை அளவு
நீலகிரி480 மி.மீ830 மி.மீ
ராமநாதபுரம்467.8 மி.மீ 787 மி.மீ
நெல்லை440.6 மி.மீ696 மி.மீ
சென்னை705 மி.மீ630 மி.மீ
வேலூர்352 மி.மீ270 மி.மீ
மதுரை395 மி.மீ320 மி.மீ
பெரம்பலூர்432 மி.மீ340 மி.மீ

தமிழகத்தில் ’நெருப்பு வளைய சூரிய கிரகணம்’ எங்கு, எப்படி தெரிந்தது?- நீங்களே பாருங்க!

ஆனால் ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் 15% அளவிற்கு அதிக மழை பெய்துள்ளது. கடந்த அக்டோபர் 16ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் வரும் டிசம்பர் 31ஆம் தேதியுடன் நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் வரும் ஜனவரி முதல் வாரம் வரை பருவமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு கடல் காற்றின் திசை, வேகம் மாறி இருப்பதே காரணம் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறியுள்ளார்.

மகப்பேறு நிதி முறைகேடு: தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு!

இதனால் தமிழகத்திற்கு கூடுதல் மழை கிடைக்க வாய்ப்புள்ளது. இதனை முறையாக சேமித்து வைத்து முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு பல்வேறு தரப்பினரும் அறிவுறுத்துகின்றனர்.

அடுத்த செய்தி