ஆப்நகரம்

சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும்

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய தாழ்வு நிலைப்பகுதி ஆந்திரா வரை நீடிக்கிறது. தமிழகம் புதுவை கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும். சென்னையில் இடியுடன் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

TOI Contributor 4 Nov 2017, 12:55 pm
தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய தாழ்வு நிலைப்பகுதி ஆந்திரா வரை நீடிக்கிறது. தமிழகம் புதுவை கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும். சென்னையில் இடியுடன் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
Samayam Tamil north east monsson rain will continu to lash tamil nadu and pudhucherry says chennai
சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும்


தமிழகத்தில் கடந்த 5 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தமிழகத்திற்கு வழக்கமாக வடகிழக்கு பருவ மழை அக்டோபர் மாதத்தில் துவங்கும். ஆனால், இந்த ஆண்டு தாமதமாக மாத இறுதியில் துவங்கி பெய்து வருகிறது. மன்னார் வளைகுடா பகுதியில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

தற்போது இந்த வளி மண்டல மேலடுக்கு சுழற்சி தென்மேற்கு வங்கக் கடலில் ஆந்திரா வரை நீடிக்கிறது. எனவே, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழகம், புதுவை கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும். சென்னையில் இடியுடன் மாலையில் கனமழை பெய்யும். உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை இருக்கும். சென்னை புறநகரிலும் இன்று கனமழை இருக்கும் என்று பாலச்சந்திரன் தெரிவித்தார்.

North east monsson Rain will continu to lash Tamil Nadu and Pudhucherry says Chennai

அடுத்த செய்தி