ஆப்நகரம்

ரயில்வே வேலைவாய்ப்பில் தமிழர்கள் புறக்கணிப்பு! திருச்சியில் ரயில்நிலையத்தில் ஆர்ப்பாட்டம்!!

ரயில்வே வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கக்கோரி திருச்சி பொன்மலை ரயில்நிலையம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்த்தேசியப் பேரியக்க அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Samayam Tamil 3 May 2019, 12:37 pm
ரயில்வே வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கக்கோரி திருச்சி பொன்மலை ரயில்நிலையம் முன்பு தமிழ்த்தேசியப் பேரியக்க அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Samayam Tamil Tirchy RRB


திருச்சி பொன்மலையில் மத்திய அரசுக்குச் சொந்தமான ரயில்வே பணிமனை செயல்பட்டு வருகிறது. தொடக்கக்காலத்தில் இங்கு சுமார் 18 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக தற்போது வெறும் 4 ஆயிரம் பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். இவர்களில் 2 ஆயிரம் பேர் வடமாநிலத்தவர்கள் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே ரயில்வே தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் 100 மதிப்பெண்களுக்கு வடமாநிலத்தவர்கள் 130 மதிப்பெண்கள் பெற்ற சம்பவங்கள் தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து பணி நியனமத்திலும் தற்போது வடமாநிலத்தவர்கள் அதிகம் பேர் இடம் பெறுகிறார்கள் என்று தமிழ்த்தேசியப் பேரியக்க அமைப்பினர் குற்றம்சாட்டி வந்தனர்.
இந்நிலையில், இன்று காலை திருச்சி பொன்மலை ரயில்நிலையம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்த்தேசியப் பேரியக்க அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொன்மலை பணிமனையில் பணியாற்றும் ஆண்கள், பெண்கள் ஊழியர்கள் இதில் கலந்து கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த வந்த ரயில்வே துறையினர், அதிகாரிகள், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சம்பவத்தால், பொன்மலை ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அடுத்த செய்தி