ஆப்நகரம்

ஹேப்பி நியூஸ்: வடகிழக்கு பருவமழை தொடங்கியது!

தமிழ்நாட்டில் அடுத்த இரு தினங்களுக்கான மழை பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Samayam Tamil 28 Oct 2020, 1:19 pm
தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளிலிருந்து இன்று (அக்டோபர் 28 ) விலகி, வடகிழக்கு பருவமழை தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் துவங்கியுள்ளது.
Samayam Tamil northeast monsoon


அடுத்த 48 மணி நேரத்திற்கு தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், ஏனைய தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

அடுத்த கட்ட பொது முடக்கம்: முதல்வர் நடத்தும் ஆலோசனை!

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மேலூர் ARG (மதுரை) 6, மானாமதுரை (சிவகங்கை), திருபுவனம் (சிவகங்கை) தலா தலா 5, ராமேஸ்வரம் (ராமநாதபுரம்) 4, மண்டபம் (ராமநாதபுரம்) 3, இரணியல் (கன்னியாகுமாரி), செய்யூர் (செங்கல்பட்டு), ராஜபாளையம் (விருதுநகர்), பண்ருட்டி (கடலூர்), மேலூர் (மதுரை), வீரபாண்டி (தேனி ) தலா 2 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

அடுத்த செய்தி