ஆப்நகரம்

Chennai Rains:சென்னையில் பரவலாக மழை- வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க வாய்ப்பு

சென்னையில் பரவலாக மழை பெய்துள்ளதால், விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என கூறப்படுகிறது.

Samayam Tamil 31 Oct 2018, 8:34 am
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்திற்கு சாதகமான வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil light-house-cover-pic
சென்னையில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி


கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதன்படி சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

நேற்றிரவு ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நீடித்த மழையால், நகரின் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி நின்றது. இதன் காரணமாக சென்னையின் பிரதான சாலைகளில் செல்ல, வாகன ஓட்டிகள் சிரமப்பபட்டனர்.

அதை தொடர்ந்து இன்று அதிகாலை முதல் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. நகரின் சில பகுதிகளில் தூரல் மழை பெய்ததது. இதற்கிடையே தமிழகத்தில் விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்க கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், வடகிழக்கு காற்று வீசி வருவகிறது. தமிழகத்தில் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. அடுத்த இரு தினங்களில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது என நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி