ஆப்நகரம்

திருச்சி: இதுக்கு தென்மேற்கு பருவமழையே பரவாயில்லையே!

வடகிழக்கு பருவமழை காரணமாக திருச்சியில் பதிவாகியுள்ள மழையின் அளவு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

Samayam Tamil 5 Dec 2019, 2:59 pm
வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி தமிழ்நாடு, புதுச்சேரியில் பல இடங்களில் நல்ல மழைப்பொழிவைக் கொடுத்துள்ளது. குறிப்பாக ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் வழக்கத்தைவிட கன மழை பெய்து பெரும்பாலான நீர் நிலைகள் நிரம்பியுள்ளன.
Samayam Tamil திருச்சியில் பதிவாகியுள்ள மழையின் அளவு


இருப்பினும் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் திருச்சி உள்ளிட்ட மத்திய மாவட்டங்களிலும் மழைப் பொழிவு இயல்பாக பெய்யக்கூடியதைவிட குறைவாகவே பெய்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த வாரம் பல இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்திருந்தாலும் தற்போது மழையின் அளவு குறைந்துள்ளது.திருச்சி மாவட்டத்திலும், மாநகர், புறநகர்ப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மழை குறைந்து உள்ளது.

தமிழ்நாட்டில் இன்று மழை எங்கெல்லாம் தெரியுமா?

இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தின் இரண்டாவது மாதத்தில், சராசரி அளவைவிட குறைவாக பெய்துள்ளதாக தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.

“திருச்சி மாவட்டத்தின் வருடாந்திர இயல்பான மழையளவு, 788 மில்லிமீட்டர். இதில், நவம்பர் மாதம் வரை பெய்ய வேண்டிய மழையளவு, 717 மில்லி மீட்டரில், 511 மில்லி மீட்டர் மழை மட்டுமே பெய்துள்ளது. இது சராசரி அளவில் 65 சதவீதம் தான்” என மாவட்ட பேரிடர் மேலாண்மைத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உருவானது புதிய புயல்: ஒரு வருசத்துல இத்தனை புயலா?

மேலும், “தென்மேற்கு பருவ மழைக் காலத்தில், மாவட்டத்தின் இயல்பான அளவான, 221 மில்லி மீட்டரை விட, 34 மில்லி மீட்டர் அதிகமாக மழை பெய்தது. ஆனால், அக்டோபரில் தொடங்கிய வடகிழக்கு பருவ மழைக் காலத்தில், இயல்பான அளவு மழை கிடைக்கவில்லை.

அக்டோபரில் பெய்ய வேண்டிய, 173 மில்லி மீட்டரில், 164.48 மில்லி மீட்டர் மழை மட்டுமே கிடைத்துள்ளது. நவம்பரில் கிடைக்கவேண்டிய, 117.7 மில்லி மீட்டரில், 22 மில்லி மீட்டர் குறைவாக, 95.3 மில்லி மீட்டர் மட்டுமே மழை கிடைத்துள்ளது. தற்போது தொடர்ந்து, விட்டுவிட்டு மழை பெய்து வரும் நிலையில், டிசம்பரில், 65.4 மீட்டர் மழை கிடைக்கவேண்டும்” என கூறுகின்றனர்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை எச்சரிக்கை - எந்தெந்தப் பகுதிகளில் தெரியுமா?

வடகிழக்குப் பருவமழைக் காலமான, டிசம்பர் மாதத்திலாவது அதிகமான அளவு மழை கிடைக்குமா என்பதே திருச்சி பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

அடுத்த செய்தி