ஆப்நகரம்

நாளை தமிழ்நாட்ட புரட்டி எடுக்கப் போகுது மழை!

இந்திய வானிலை மையம் தமிழ்நாடு புதுச்சேரி முழுவதும் கனமழை பெய்யும் எனப் பச்சை சிக்னல் கொடுத்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தென்மேற்கு பருவமழை காலம் நிறைவடைந்துவிட்டதாகக் அறிவித்துள்ளது.

Samayam Tamil 17 Oct 2019, 11:00 am
வடகிழக்கு பருவக்காற்று நேற்று அதிகாலை முதல் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, தெற்கு ஆந்திரா பகுதிகளில் வீசத்தொடங்கியது. அதே நேரத்தில், தமிழ்நாட்டின் மேல் உள்ள வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சிக் காரணமாக 2 நாட்களுக்குத் தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக்க வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. இதைத்தொடர்ந்து நேற்று இரவு முதலே தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
Samayam Tamil rain-generic_650x400_61480774773


இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் இப்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தென்மேற்கு பருவக்காற்று முழுவதுமாக நின்றுவிட்டது. வடகிழக்கு பருவக்காற்று தமிழ்நாடு முழுவதும் பரவி இருக்கிறது. அதே நேரத்தில், ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்கள் இணையும் இடத்திலும் வடகிழக்கு பருவக்காற்று வீசி வருகிறது.

அரபிக் கடலின் மத்திய கிழக்குப் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது புயலாக மாற வாய்ப்புள்ளது. இது இலங்கையில் வடக்கு கடற்கரை பகுதியிலிருந்து இந்தியாவை நோக்கி நகர்ந்து வருகிறது.

வடகிழக்கு பருவமழையைப் பொருத்தவரை தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மாஹி, கர்நாடகா கடலோரப் பகுதிகள், தெற்கு கர்நாடகா பகுதிகளில் அடுத்த 4 நாட்களுக்கு ஒருசில இடங்களில் கனமழை பெய்யும். குறிப்பாகத் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை பரவலாகக் கனமழை பெய்யும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

அடுத்த செய்தி