ஆப்நகரம்

வடகிழக்கு பருவமழை இன்று தொடங்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

வடகிழக்கு பருவ மழை இன்று அல்லது நாளை தொடங்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 20 Oct 2018, 11:10 am
தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் தமிழகத்தில் பெய்து வருகிறது.
Samayam Tamil sbkbsfa


இந்நிலையில் தென்மேற்கு பருவமழை காலம் முடிவடைய இருப்பதாகவும், தமிழகத்தில் பருவமழை தொடங்குவதற்கான சாகதமான சூழல் இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியதாவது:

தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும்புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான எச்சரிக்கையும் வழங்கப்பட்டு இருக்கிறது.

தென்மேற்கு பருவமழை இன்றுடன் நிறைவடைய இருக்கிறது, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைக்கான சாதகமான சூழல் நிலவி வருகிறது. இதன்காரணமாகஅக்டோபர் 20 அல்லது 22 ஆம் தேதிவடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்புஅதிகளவில் உள்ளது.

அதேபோல் தாய்லாந்து, வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இது வருகிற 22 ஆம் தேதி வடக்கு அந்தமான் நோக்கி நகர்ந்து, அங்கு குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுப்பெறுகிறது.

சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்தில், வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது .’’என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி