ஆப்நகரம்

கனமழை எச்சரிக்கை; சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

கனமழை எச்சரிக்கையால் பல்வேறு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

TNN 1 Nov 2017, 7:49 am
சென்னை: கனமழை எச்சரிக்கையால் பல்வேறு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil northern districts of tn announced holiday due to heavy rain
கனமழை எச்சரிக்கை; சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!


தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கடந்த 2 நாட்களுக்கு பல்வேறு கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையில் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வடமாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

இந்த சூழலில் கனமழை எச்சரிக்கை காரணமாக, சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம், நாகை, கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏராளமான பள்ளிகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் மழை பாதிப்புகளில் இருந்து தப்பிக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Northern districts of TN announced holiday due to heavy rain.

அடுத்த செய்தி