ஆப்நகரம்

விடுதலைக்கு பிறகும் சசிகலாவுக்கு புதிய சிக்கல்..! செக் வைக்கும் அமலாக்கத்துறை

சொத்துக்கள் வாங்கியதை குறித்து கூடுதல் தகவல் அளிக்கக்கோரி சசிகலாவுக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Samayam Tamil 27 Jan 2021, 6:32 pm
சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சிறையில் இருந்து இன்று விடுதலை செய்யபட்டார். இன்று காலை அவரிடம் விடுதலை தொடர்பான ஆவணங்களில் கையொப்பம் வாங்கிய சிறை அதிகாரிகள் அவரை அதிகாரபூர்வமாக விடுதலை செய்து அவருக்கு கொடுத்து வந்த பாதுகாப்பில் இருந்து விடுபட்டனர்.
Samayam Tamil sasikala


ஆனால், கொரோனா சிகிச்சை காரணமாக சில நாட்கள் அவர் தொடர்ந்து பெங்களூருவில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அவரது சொத்துக்கள் குறித்து பதிலளிக்க அமலாக்கத்துறை நோட்டிஸ் அனுப்பியுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்டில் சசிகலாவின் கோடிக்கணக்கான சொத்துக்களை பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை முடக்கியது. சசிகலாவுக்காக போயஸ் கார்டன் வேதா நிலையத்துக்கு எதிராக கட்டப்பட்டு வரும் பங்களாவும், அதுதவிர 64 சொத்துகளும் முடக்கப்பட்டன.

சொத்துக்கள் முடக்கப்பட்ட நிலையில் அவற்றை வாங்கியது தொடர்பான கூடுதல் தகவலை அளிக்கக்கோரி அமலாக்கத்துறை கோரிக்கை வைத்திருந்தது. ஆனால், சிறையில் இருந்த சசிகலா அதற்கு பதிலளிக்காமல் இருந்து வந்த நிலையில், விடுதலைக்கு பின்னர் தற்போது நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.

''தமிழகத்தில் ஆட்சிமாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள்'': கே.எஸ். அழகிரி கருத்து

முன்னதாக கடந்த 2017ஆம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான 180 இடங்களில் வருமான வரிதுறை சோதனை நடத்தியது. அதில், சசிகலா குடும்பத்தினர், சுமார் ரூ.1,600 கோடிக்கும் மேல் வரை வரி ஏய்ப்பு செய்ததாகவும், பல்வேறு நிறுவனங்களை பினாமிகளின் பெயரில் வாங்கி சொத்துகளை முறைகேடாக குவித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, சசிகலாவுக்கு சொந்தமான ரூ.1600 கோடி மதிப்பிலான சொத்துகளை பினாமி திருத்த சட்டம் 20017இன் கீழ் வருமானவரித்துறையினர் அதிரடியாக நீதிமன்றம் மூலம் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி