ஆப்நகரம்

வாங்காத கடனுக்கு வட்டி- விவசாயியிடம் மன்னிப்பு கோரிய வங்கி நிர்வாகம்!

திருவாரூரைச் சேர்ந்த விவசாயி பாண்டியனுக்கு, விளமல் பகுதியில் உள்ள எஸ்.பி.ஐ வங்கியில் இருந்து சமீபத்தில் ஒரு நோட்டீஸ் வந்தது. அதில் தாங்கள் வங்கியில் வாங்கிய கடனை கட்டாததால், உங்களது வங்கி கணக்கில் இருந்து 2 சதவீதம் வட்டி வசூல் செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது.

Samayam Tamil 27 Aug 2019, 2:33 pm
திருவாரூரில் வங்கியில் கடன் எதுவும் பெறாத நிலையில், 3 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியதாக வங்கி நிர்வாகம் விவசாயிக்கு நோட்டீஸ் அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் வங்கி நிர்வாகம் மீது தவறு இருப்பது தற்போது நிரூபணமாகியுள்ளது.
Samayam Tamil வாங்காத கடனுக்கு வட்டி- விவசாயியிடம் மன்னிப்பு கோரிய வங்கி நிர்வாகம்!
வாங்காத கடனுக்கு வட்டி- விவசாயியிடம் மன்னிப்பு கோரிய வங்கி நிர்வாகம்!


திருவாரூர் மதுரா நகரைச் சேர்ந்தவர் விவசாயி பாண்டியன். இவர் எஸ்.பி.ஐ வங்கியின் திருவாரூர் கிளையில், வீட்டு கடன் பெற்று மாதம்தோறும் தவணை செலுத்தி வருகிறார். இந்நிலையில், இவரது வீட்டு முகவரிக்கு விளமல் பகுதியில் உள்ள எஸ்.பி.ஐ வங்கியில் இருந்து சமீபத்தில் ஒரு நோட்டீஸ் வந்தது.

அதில் தாங்கள் வங்கியில் வாங்கிய 3 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் கடனை கட்டாததால், உங்களது வங்கி கணக்கில் இருந்து 2 சதவீதம் வட்டி வசூல் செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது.

விளமல் கிளையில் கணக்கே இல்லாத நிலையில், வாங்காத கடனுக்கு வட்டியோடு, அபராதமும் கேட்டு வங்கி நிர்வாகம் அனுப்பிய கடிதம், பாண்டியனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அவர் எஸ்.பி.ஐ வங்கியின் வேறொரு கிளையில் வைத்திருந்த வங்கிக் கணக்கில் இருந்து, 4 ஆயிரத்து 600 ரூபாய் பணம் பிடித்தம் செய்ததும் தெரியவந்தது.

கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கால குளியல் தொட்டி கண்டெடுப்பு!

இதனால் அதிர்ச்சியடைந்த, விவசாயி பாண்டியன் வங்கி நிர்வாகத்திடம் சென்று விளக்கம் கேட்டுள்ளார். ஆனால், அங்கிருந்த அதிகாரிகள் முறையான பதில் அளிக்காமல் அலட்சியம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து விவசாயி பாண்டியன், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கி மற்றும் சம்பந்தப்பட்ட வங்கி மேலாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். அதில், வங்கியில் கடன் வாங்காமலேயே விவசாயிக்கு நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தில் வங்கியின் மீது தவறு இருப்பது தெரியவந்தது.

பல்லாவரத்தில் ராணுவ அதிகாரி சுட்டுக் கொலை!

இதுகுறித்து வங்கி மேலாளர் சக்திவேல் கூறுகையில்; விவசாயி பாண்டியனுக்கு வாங்காத ரூ.3.90 லட்சம் கடனுக்கு நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தில் வங்கி நிர்வாகம் மீது தவறு உள்ளது.

இதில் பாண்டியனுடைய வங்கிக் கணக்கு கடந்த 21-ம் தேதி மூடப்பட்டுவிட்டது. மேலும் அவருடைய கணக்கில் இருந்து பிடித்த வட்டி அபராத தொகை 4,600 ரூபாயை மீண்டும் அவருடைய வங்கிக் கணக்கில் செலுத்தி விட்டோம் என்று கூறினார்.

பிரபல வங்கியின் ஏடிஎம்மில் மொபைல் இல்லாமல் பணம் எடுக்க முடியாது!

அடுத்த செய்தி