ஆப்நகரம்

ஐயோ! டிசம்பர் 1 வரை இப்படித் தான்: தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு!

Chennai Rains Today சென்னையில் அடுத்த ஐந்து நாள்கள் மழைப் பொழிவு உச்சத்தை எட்டும் என தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.

Samayam Tamil 26 Nov 2021, 8:57 am
தமிழ்நாட்டில் நேற்று முதல் பரவலாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று இரவு முதல் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது.
Samayam Tamil chennai rains


நவம்பர் தொடக்கத்திலிருந்தே சென்னையில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ள நீர் குடியிருப்புகளுக்குள் புகுந்தது. வெள்ள நீரை வெளியேற்றும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் அடுத்த ஐந்து தினங்கள் சென்னையில் மழை புரட்டி எடுக்கப்போகிறது என்ற எச்சரிக்கை விடுத்துள்ளார் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்.
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்: சற்றுமுன் வெளியான அறிவிப்பு!
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதளப் பதிவில், “நவம்பர் 27ஆம் தேதி முதல் டிசம்பர் 1ஆம் தேதி வரை சென்னையில் மழைப் பொழிவு உச்சத்தை எட்டும். இதற்கு முந்தைய நிகழ்வுகள் போல் அல்ல, ஒரு நாள் மட்டும் நடந்து முடியாது, 4 முதல் 5 நாள்கள் வரை இருக்கும். அதற்காக விடாமல் பெய்யும் என்று அர்த்தமில்லை. விட்டு விட்டு மழை பெய்யும். இரவு முதல் அதிகாலை வரை மழைப் பொழிவு அதிகமாக இருக்கும். சில நேரங்களில் பகலிலும் கனமழை பெய்யும்” என தெரிவித்துள்ளார்.
செந்தில் பாலாஜிக்கு டெல்லி செக்: என்ன செய்யப் போகிறார் ஸ்டாலின்?
தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறுவதற்கு வாய்ப்பில்லை. இந்த மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்திருந்தது.
ஸ்டாலின் கைக்கு போன ரிப்போர்ட்: கலக்கத்தில் அமைச்சர்!
அதேசமயம் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நவம்பர் 29ஆம் தேதி உருவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு, வடமேற்கு திசையில் அடுத்த 48 மணி நேரத்தில் நகரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி