ஆப்நகரம்

கொரோனா: பெருமையை இழந்த மாவட்டம்!!

கொரோனா இல்லாத மாவட்டமாக திகழ்ந்த தருமபுரி தற்போது அந்த பெருமையை இழந்துள்ளது.

Samayam Tamil 25 May 2020, 5:11 pm
தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. நேற்று (மே 24) மாலை நிலவரப்படி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மொத்தம் 16 ஆயிரம் பேருக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
Samayam Tamil corona


இதில் சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அத்துடன் திருவள்ளூர், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட வடமாவட்டங்களும் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித் தவித்து வருகின்றன.

இத்தகைய சூழலில், ஆறுதல் அளிக்கும் விஷயமாக தருமபுரி கொரோனா இல்லாத மாவட்டமாக திகழ்ந்து வந்தது. கடந்த 15 நாட்களாக பெற்றிருந்த இந்தப் பெருமை அந்த மாவட்டம் தற்போது இழந்துள்ளது.

ஐந்தாம் கட்ட பொது முடக்கம்: மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தும் முதல்வர்

தரும்புரி மாவட்டத்துக்குட்பட்ட பாபிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த ஒரு நபருக்கு தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள தமது உறவினர் வீட்டுக்கு அந்த நபர் அண்மையில் சென்று ஊர் திரும்பிய நிலையில், அவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்த மாவட்டத்தில் கடந்த மாதம் 23 ஆம் தேதி (ஏப்ரல் 23) முதன்முறையாக கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது.

ஹேப்பி நியூஸ் மக்களே! வெயில் குறைந்து மழைக்கு வாய்ப்பு!

நாடு முழுவதும் அமலில் உள்ள பொதுமுடக்கம், மே 3 ஆம் தேதி இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்டது. அப்போது தமிழகத்தில் கொரோனா இல்லாத ஒரே மாவட்டம் என்ற பெருமையை கிருஷ்ணகிரி (green zone) பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி