ஆப்நகரம்

perarivalan verdict: அற்புதம்மாள் பொற்பாதங்கள் இனியேனும் ஓய்வெடுக்கட்டும் -சீமான் உருக்கம்!

பேரறிவாளன் விடுதலை குறித்து நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், திமுக எம்.பி. கனிமொழி, வி.கே. சசிகலா, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Samayam Tamil 18 May 2022, 7:13 pm

ஹைலைட்ஸ்:

  • பேரறிவாளன் விடுதலை
  • சீமான், சசிகலா வரவேற்பு
  • கனிமொழி, டிடிவி தினகரன் கருத்து
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil சீமான்
பேரறிவாளன் விடுதலை குறித்து சீமான் கருத்து
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து தம்மை விடுதலை செய்ய கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. பேரறிவாளனை விடுதலை செய்து நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை காங்கிரஸ் விமர்சித்து வந்தாலும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.
நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்: 31 ஆண்டுகால சட்டப்போராட்டத்திற்குப் பிறகு பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த மன நிறைவை தருகிறது. காலதாமதமாக வழங்கப்பட்ட போதிலும், கிடைத்துள்ள நீதியானது இந்த நாட்டின் நீதியமைப்பின் மீதான எளிய மக்களின் நம்பிக்கையை மீண்டும் உயிர்ப்பித்துள்ளது.

கால் நூற்றாண்டுக்கும் மேலாகச் சிறைக்கூடங்களுக்கும், நீதிமன்றங்களுக்கும் நடந்து, நடந்து தேய்ந்த அற்புதம்மாளின் பொற்பாதங்கள் இனியேனும் ஓய்வெடுக்கட்டும். சிறகொடிந்த பறவையாய் இளமையைச் சிறைகொட்டடியில் தொலைத்த தம்பி பேரறிவாளனின் வருங்காலமாவது தாயின் அரவணைப்பில் வசந்தமாகட்டும்.

பாஜகவை பார்த்து பயப்படுகிறதா திமுக? கூட்டணிக்குள் மினி மநகூ!
கனிமொழி எம்.பி: பேரறிவாளன் அவர்களை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தாமதமாகியிருந்தாலும், நீதியும், அற்புதம்மாள் என்ற தாயின் போராட்டமும் வென்றிருக்கிறது. மாநில அரசின் முடிவினை ஆளுநர் வேண்டுமென்றே காலம் தாழ்த்தும் முறைக்கும் உச்ச நீதிமன்றம் குட்டு வைத்துள்ளது வரவேற்கத்தக்கது.

டிடிவி தினகரன்: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் முடிவை ஆளுநர் போன்ற பதவியிலிருப்பவர்கள் மதித்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை இத்தீர்ப்பு உறுதிப்படுத்தியிருக்கிறது.


வி.கே.சசிகலா: பேரறிவாளனுக்கு இன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரவேற்கத்தக்கது. பேரறிவாளனின் விடுதலை தமிழின மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. அன்று அம்மா விதைத்த விதைக்கு கிடைத்த பலனாகத்தான் இதை பார்க்கிறேன். நம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கடந்த 2014 ஆம் ஆண்டில் ஏழு நபர்களும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று சட்டமன்றத்தில் சூளுரைத்தார்..

அடுத்த செய்தி