தமிழகம் பயங்கரவாதிகளின் கூடாரம் என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷணன் கூறுவது ஜமுக்காலத்தில் வடிகட்டிய பொய் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா பேரவை சார்பில் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டம் முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழகம் பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறியுள்ளதாக கூறியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், “பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருப்பது ஜமுக்காலத்தில் வடிக்கட்டிய பொய். தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது. இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கு சீராக இருப்பது தமிழ்நாட்டில் மட்டும்தான். மற்ற மாநிலங்களுடன் சட்ட ஒழுங்கை தமிழ்நாட்டுடன் ஒப்பிட்டு பார்த்தால் தெரியும்” என்று அதிரடியாக பதிலளித்துள்ளார்.